பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, August 2, 2011


வையகம் போற்றும் வான் மறை

இனிய திருக்குர்ஆனே!
இறை மறையே!
v   
நீ!
உலகின் இருளை
ஒழிக்க வந்த பேரொளி!
v   
ஆராய்பவர்களுக்கு
அட்சய பாத்திரம்!
v   
அறிவின் வேர்
வேருக்கு நீர்!
v   
அஞ்ஞானத்தின் பலி பீடம்
விஞ்ஞானத்தின் ஆய்வு கூடம்!
v   
ஆத்மீக சூரியன்
லௌகீக சந்திரன்!
v   

சாந்தி நபியின்
சமாதான தூது!
v   

Monday, August 1, 2011

​( நோன்பு தொடர்பாக நான் எழுதிய இக் கட்டுரை 1-8-2011 வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. )
புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்
"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

ஆம்! உலக முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் ஒரு முறை புனித ரமழான் வந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.

புண்ணியம் மொழியும் கண்ணியமிகு மாதமான இம்மாதம் பாவக் கறையகற்றும் மாதமாகும். பதினொரு மாதமும் நாம் செய்த பாவங்களை கழுவி பரிசுத்தப்படுத்துவதற்காக இனிய நோன்பு வருடத்தில் ஒரு தடவை வருகிறது.

Thursday, July 28, 2011


படங்களின் மேல் கிளிக் செய்யுங்கள் பெரிதாகத் தெரியும்

Wednesday, July 27, 2011

படங்களின் மேல் கிளிக் செய்யுங்கள் பெரிதாகத் தெரியும்




Tuesday, July 12, 2011


கவிப் பேரரசு வைரமுத்து வாழ்கவே!

(இன்று வைரமுத்துவின் 58 ஆவது பிறந்த தினம்)

தமிழ் உலகின்

கவிப் பேரரசனே!

கவிதைகளுக்குள்ளும்

பாடல் வரிகளுக்குள்ளும்

வைரங்களையும்

முத்துக்களையும்

விதைத்து வைத்திருப்பவனே!

கவிதைகளை பாமரனின்

காலடிகளுக்கு கொண்டு சென்றவனே!

உனது

காதல் பாடல்களும்

கவிதை வரிகளும்

காதலர்களின்

தேசிய கீதமாக அல்லவா

ஒலித்துக்கொண்டிருக்கிறது.


உன் கவிதைகளில்

கொஞ்சும் சந்தம்!

நீ!

தமிழ் பேசும் மக்களின் சொந்தம்!

வாழ்க நீடூழி!!!

கவியாக்கம் -கலாநெஞ்சன் ஷாஜஹான்

Monday, July 11, 2011


கண்ணீர்

கண்கள்

வெளியேற்றும் கழிவு!

·

பெண்களின்

ஆயுதம்!

·

சிறுவர்களின்

பாதுகாப்புக் கவசம்.

சாதிக்கும் சக்தி!

·

மனச் சுமைகளை

குறைக்கும் மருந்து!

·

இதய வேதனையின்

இரத்தக் கசிவு!

·

போலி மனிதர்கள்

அணியும்

மூக்குக் கண்ணாடி!

·

விழி வானம்

துன்பத்திலும்

ஆனந்தத்திலும்

சிந்தும் மழை!

கவியாக்கம்கலாநெஞ்சன் ஷாஜஹான்

Sunday, July 10, 2011

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு வித்தை

இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் கிரகெம் பீட்டர் சுவனுக்கும் இடையிலான சுவாரசியமான போட்டி ஒன்று அண்மையில் நடந்தது.
இது ஒரு வித்தியாசமான போட்டியாகும். விக்கற் தடிகளின் மேல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கிளாஸின் விளிம்பில் வைக்கப்பட்டுள்ள நாணயத்தை கண்ணாடி கிளாஸ் கீழே விழாமல் வீழ்த்த வேண்டும்.
இந்த போட்டியில் வெற்றி பெறப் போவது யார்? காணொளியில் பாருங்கள்.

Saturday, July 9, 2011


போராட்டம்

அன்பே!
சாதியைவென்ற
எமது காதல்
இந்த தேசத்தை போல
பெருமைக்குரியது என்றாய்.
உண்மை!
அதனால்தான்
நாம் இருவரும்
இன்னும் இணைந்து விடாமல்
எமது பெற்றோர்
போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கவியாக்கம்- கலாநெஞ்சன் ஷாஜஹான்

மனிதன்
ஒரு வனம்!

எல்லா மிருகங்களும்
வாழும் கூடு
அவன் மனம்!
குரங்கு போல் தாவும்
அவன் குணம்!
விலங்கு போல்
கூட்டம் கூட்டமாய் பிரியும்
அவன் இனம்!
சிங்கம் போல் வேட்டையாடுவான்
அது பணம்!
ஒரு நாள் இறப்பான்
அப்போது அவன் பிணம்!

கவியாக்கம்- கலாநெஞ்சன் ஷாஜஹான்

Sunday, June 26, 2011

தந்திர மனிதனின் அற்புத செயல் இதோ.பார்த்து மகிழுங்கள்


Saturday, June 18, 2011

முதலையின் வாயிலில் மனிதனின் தலை

அமெரிக்காவின் புளோரடா மாநிலத்தில் சாகச கலைஞர் ஒருவர் முதலையின் வாயிலில் தனது தலையையிட்டு சாகசம் நிகழ்த்தினார்.அதன் போது முதலையின் வாயிலில் அவரது தலை சிக்கிக் கொண்டது.பின்னர் அவர் காப்பாற்றப்பட்டார்.



Wednesday, June 15, 2011

இந்தியாவில் கேரள மாநிலத்தில் யானை ஒன்று குழப்பம் எடுத்து சேதங்களை ஏற்படுத்தியது .அக் காட்சி