பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, June 3, 2013

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கம்பகா மாவட்ட பிரதேச செயலகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் செயலமர்வொன்றை கடந்த சனிக்கிழமை(1-6-2013) நடத்தியது.
'குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளை அறிக்கையிடும் விடயத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்பு' என்ற

Sunday, June 2, 2013

காலத்தை வென்ற குரல் காற்றோடு கலந்தது

(இக்கவிதை 2-6-2013, இன்றைய 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)





காற்றோடு
கலந்தது
தமிழ்;பாட்டுக் குயில்!

அரை நூற்றாண்டாய்
தமிழ் சினிமா
இசை உலகையாண்ட
சிம்மக் குரல்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

பாட்டுக்கு உயிர் கொடுத்த
இசைக் குயில்
அதன் பாட்டுக்கு
பறந்து விட்டது
இசை உலகைவிட்டு!

Friday, May 24, 2013

'பிரைவேட் பஸ்" (சிறுகதை)


     
-      கலாநெஞ்சன் ஷாஜஹான்

'பஞ்சிகாவத்த...மருதான.... டவுன் ஹோல் .... பம்பலப்பிட்டிய...நகின்ட... நகின்ட...'
நோன்ஸ்டப்' ஆக ஒலிக்கும் அந்;த தனியார் பஸ் நடத்துனனின் குரல் ஆமர் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நான் அவசரமாக ஓடிச் சென்று பஸ்ஸினுள் ஏற முயன்று, பாதி வெற்றியும் மீதி தோல்வியுமாய் சுவரில் எறியப்பட்ட பந்தாக மீண்டும் வெளியே வந்து விழப்போய் ஒருவாறு என்னை பஸ்ஸினுள் நுழைத்துக்கொள்கிறேன்.

Friday, May 17, 2013

நீர்கொழும்பில் விபசாரிகளுக்கு ‘அசிட்’ வீச்சு எச்சரிக்கை சுவரொட்டிகள்


நீர்கொழும்பு நகர வர்த்தகப் பிதேசங்களின் சில இடங்களிலும் குறிப்பாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாகவும் விபசாரிகளுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள 'அசிட் வீச்சு' எச்சரிக்கை சுவரொட்டிகள் காரணமாக வீதியோர விபசாரிகள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, May 1, 2013

சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதை போட்டியில் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு பரிசு



 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால் சர்வதேச மட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் அபுதாபியை சேர்ந்த கவியன்பன் கலாம் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

Saturday, April 27, 2013

மின்சாரம் அது சம்சாரம்


(இக்கவிதை   (28-4-2013 ) "தமிழ் தந்தி" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது 


'கரன்ட் பில்' ஏறிபோச்சு
'கரன்ட்' பட்ட நிலையாச்சு
இருட்டுக்குள் வாழும் காலமாச்சு
வரண்டு போல நிலம் போல ஆச்சு

மின்னல் போல மின்சாரம் தாக்கியாச்சு
இன்னல் மழை பொழியும் வானமாச்சு
குப்பி விளக்கின் மவுசு கூடிபோச்சு
குப்பை போல வாழ்க்கையானதாச்சு


Saturday, April 20, 2013

இரு நூல்களின் ஆய்வரங்கு



தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' , சுமதி குகதாசனின் 'தளிர்களின் சுமைகள் ' ஆகிய நூல்களின் ஆய்வரங்கு எதிர்வரும் (ஏப்ரல); 28 ஆம் திகதி,  ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு 58,  தர்மாராம வீதி,  கொழும்பு 06. இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Wednesday, April 3, 2013

சட்டத்தை கையில் எடுத்துள்ள பொது பலசேனாவும் பேரினவாதிகளும்


- எம்.இஸட்.ஷாஜஹான் B.Ed

இலங்கை முஸ்லிம்களுக்கு சோதனைகளும் வேதனகளும் மிகுந்த காலம் இது. நாளுக்கு நாள் பேரினவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்டு

Saturday, March 30, 2013

Fashion Bug வர்த்தக நிலையம் மீது பேரினவாதிகளின் தாக்குதல் (வீடியோ)


பெப்பிலியான நகர வர்த்தக நிலையம்  (Fashion Bug) மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி (28-3-2013) நூற்றுக்கும் மேற்பட்டோர்  அடங்கிய குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சில மணித்தியாலங்களாக  இந்த தாக்குதல் இடம்பெற்ற போதும்

Friday, March 29, 2013

நீர்கொழும்பில் பாஸ்கு நாடகம் (படங்கள்)


 சின்னரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்களில் பெரிய வெள்ளிக்கிழமை தினம் நேற்று (29-3-2013) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

Wednesday, March 20, 2013

முஸ்லிம் பெண்களின் 'அபாயாவும்' பேரினவாதிகளின் எச்சரிக்கை மணியும்


-     எம்.இஸட். ஷாஜஹான் B.Ed 

     (கலாநெஞ்சன்  ஷாஜஹான்   )       

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சி;யான விடயங்கள் முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்து வரும் நிலையில் முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் அடுத்த எச்சரிக்கை மணிகள்  தொடர்ச்சியாக  அடிக்கப்பட்டு வருகின்றன.

Friday, March 15, 2013

எயிட்ஸ் நோயும் அறிந்திருக்க வேண்டிய சில விடயங்களும்



-   கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed
  

எயிட்ஸ் (AIDS) என்ற சொல்லை கேட்டாலேயே எல்லோருக்கும் அச்சம்
ஏற்படும். இந்நோய் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகும்.

உலகின் பல நாடுகளிலும் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளான பல இலட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலகில் தினமும் பல ஆயிரக்கணக்கானோர எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

'சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களும்'




-     கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


இலங்கையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் அதிர்ச்சி  தகவல்கள்  வெளிவந்து  கொண்டே  இருக்கின்றன.

சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படல், வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட  பின்னர்  கொலை செய்யப்படல், அச்சுறுத்தப்படல் மற்றும்  சிறுவர் உரிமைகள் பல்வேறு  வகைகளிலும்  மீறப்படல் என்று  கவலை தரும் விடயங்கள் தொடர்கதையாக  வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Saturday, March 9, 2013

நீர்கொழும்பு பொலிஸாரின் மகளிர் தின நிகழ்வு


சர்வதேச மகளிர் தினத்தையிட்டு நீர்கொழும்பு பொலிஸார்   நடத்திய மகளிர் தின நிகழ்வு  இன்று சனிக்கிழமை (9-3-2013) நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் நடைபெற்றது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையம், ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸ் நிலையம் ஆகியன

அபூர்வ அண்ணாசிக்காய்


அபூர்வமான அண்ணாசிக்காய் ஒன்று வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் விற்பனைக்கான வைத்திருந்தார். 


கொஸ்வத்தை பிரதேசத்தில் உள்ள அண்ணாசி தோட்டத்தில் இந்த அண்ணாசிக்காய் கிடைத்தததாக அந்த வியாபாரி தெரிவித்தார்.

Tuesday, January 29, 2013

கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய நபிபெருமானார் புகழ்பாடல் (பாடல் இணைப்பு)



இறைதூதர் முஹம்மது நபி அவர்களின் நினைவு தினத்தையிட்டு (25.1.2013 ) முஹம்மத் நபி எப்படியெல்லாம் பொறுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்ந்தார் என்பதை அடியொட்டி வெளிவந்துள்ளது ´லாயிலாஹ இல்லல்லாஹ்´´ ஆரம்பிக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய பாடல். 

Thursday, January 24, 2013

பாலையில் பூத்த ரோஜா




ஆழி சூழ்ந்த பூவுலகில்
   ஆதவனாய் நபி பிறந்தார்
பாலை மண்ணில் சோலை வனமாய்
   பாரில் எங்கள் நபி பிறந்தார்
சோலை வனத்தில் நறு மலராக
   சத்தியத் தூதர் நபி பிறந்தார்

Sunday, January 13, 2013

கொழும்பில் நடந்த மூன்று மொழி பெயர்ப்பு நூல்களின் வெளியீடடு விழா


 இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழி பெயர்ப்புப் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு 08.01.2013 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க

Wednesday, January 9, 2013

பூவுக்கு வைத்தார்கள் நெருப்பு!


  
வறுமை சேற்றில் பூத்த
செந்தாமரை மலருக்கு
பாலை மண்ணில்
மரண தண்டனை..!


சகோதரி ரிஸானா நபீக்!
உனக்கு வழங்கப்பட்டது
தீர்ப்பு அல்ல!
தீ !


Monday, January 7, 2013

கொழும்பில் மூன்றுமொழி பெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு விழா


அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டாக்டர் நொயல் நடேசன் மற்றும் முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்காஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் செயற்குழுக் கூட்டஅறையில் (இலக்கம் 08)