பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, September 5, 2013

நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவில் பரிசு


 மெட்ரோ நிவ்ஸ்’ பத்திரிகையில் 5-9-2013 அன்று பிரசுரமான செய்தி


Sunday, August 18, 2013

'சர்வதேசம் வரை சென்ற பள்ளிவாசல் தாக்குதலும் தொடர்ந்து எழுந்த எதிரொலிகளும் கண்டனங்களும்’

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுத்தி நிற்கிறது.
ஹலால் விவகாரம் , அபாயா விவகாரம் , பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள் என தொடர்கதையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் அடக்குமுறைகளை  வெற்றி கொள்ளக் கூடிய ஒரே ஆயுதம் முஸ்லிம்கள் கட்சி பேதங்கள்; , பிரதேச பேதங்கள், ஜமாஅத் பிரிவு பேதங்களை மறந்து ஒற்றுமையெனும்

Thursday, August 8, 2013

நீர்கொழும்பில் நோன்புப் பெருநாள் தொழுகை

புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று நீர்கொழும்பு பள்ளிவாசல்களில் இன்று இடம்பெற்றன. இதன்போது பள்ளிவாசல்களின் மௌவிமார்களால் விஷேட பெருநாள் குத்பா நிகழ்த்தப்பட்டன.

வந்தது நோன்புப் பெருநாளே



தக்பீர் முழக்கம் பள்ளியில் ஒழிக்க
இதயங்கள் தோறும் இன்பங்கள் பிறக்க
வந்தது நோன்புப் பெருநாளே
இன்பம் பொங்கும் திருநாளே

புத்தாடை யணிந்து நறு மணம் பூசி
பள்ளிக்குச் சென்று வருவோமே
ஒருவரை யொருவர்  ஆரத் தழுவி
ஸலாம் கூறி மகிழ்வோமே

Wednesday, August 7, 2013

ரமழானின் போதனைகளை நாளும் கடைப்­பி­டிப்போம்



('ரம­ழானின் போத­னை­களை நாளும் கடைப்­பி­டிப்போம்' எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இன்றைய (8-8-2013) வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)



  

அல்லாஹ் தஆலாவின் அருளினால் இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் இனிய வாழ்த்துக்கள்


Sunday, August 4, 2013

ஸகாத் எனும் பூ

4-8-2013 அன்று தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமான எனது கவிதை



உடலின் ஸகாத்
நோன்பு!
உள்ளத்தின் ஸகாத்
அன்பு!

Saturday, August 3, 2013

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (2-8-2013) மாலை நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள பெரடைஸ் பெலஸ் உற்சவ மண்டபத்தில் இடம்பெற்றது.

Sunday, July 28, 2013

புனித ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்ர்' இரவு

புனித ரமழானின் மூன்றாவது பகுதி இன்னும் இரண்டு தினங்களில் (செவ்வாய்க்கிழமை) ஆரமபமாகிறது. ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்" இரவு மூன்றாவது பகுதியில் மறைந்திருக்கிறது.

Thursday, July 25, 2013

அருள் மழை பொழியும் புனித நோன்பு


 
பன்னிரண்டு ஆண்டுகளில்
ஒரு முறை
மலை மீது மலர்வது
குறிஞ்சிப் பூ!

பன்னிரண்டு மாதங்களில்
ஒரு முறை
பூமியிலே பூப்பது
நோன்பு!

Sunday, July 21, 2013

இரண்டு வருடமாக வெடிப்படைந்து வடிந்தோடிக் கொண்டிருந்த குடிநீர் விநியோகக்; குழாய் திருத்தப்பட்டது: ஊடகவியலாளருக்கு பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு - தலாதீவு கருமாரி அம்மன் கோயில் முன்பாக உள்ள வீதியோரத்தில் குடிநீர் விநியோகம் செய்யும்; குழாய் வெடிப்படைந்ததன்காரணமாக கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தண்ணீர்; வீணாய் வீதியோரத்தில் வடிந்தோடுவதாக கடந்த புதன் கிழமை (17-7-2013) தொலைக்காட்சியில் ‘நிவ்ஸ்ட் பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர்’

Monday, June 3, 2013

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

கம்பஹா மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கம்பகா மாவட்ட பிரதேச செயலகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் செயலமர்வொன்றை கடந்த சனிக்கிழமை(1-6-2013) நடத்தியது.
'குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளை அறிக்கையிடும் விடயத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்பு' என்ற

Sunday, June 2, 2013

காலத்தை வென்ற குரல் காற்றோடு கலந்தது

(இக்கவிதை 2-6-2013, இன்றைய 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)





காற்றோடு
கலந்தது
தமிழ்;பாட்டுக் குயில்!

அரை நூற்றாண்டாய்
தமிழ் சினிமா
இசை உலகையாண்ட
சிம்மக் குரல்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

பாட்டுக்கு உயிர் கொடுத்த
இசைக் குயில்
அதன் பாட்டுக்கு
பறந்து விட்டது
இசை உலகைவிட்டு!

Friday, May 24, 2013

'பிரைவேட் பஸ்" (சிறுகதை)


     
-      கலாநெஞ்சன் ஷாஜஹான்

'பஞ்சிகாவத்த...மருதான.... டவுன் ஹோல் .... பம்பலப்பிட்டிய...நகின்ட... நகின்ட...'
நோன்ஸ்டப்' ஆக ஒலிக்கும் அந்;த தனியார் பஸ் நடத்துனனின் குரல் ஆமர் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நான் அவசரமாக ஓடிச் சென்று பஸ்ஸினுள் ஏற முயன்று, பாதி வெற்றியும் மீதி தோல்வியுமாய் சுவரில் எறியப்பட்ட பந்தாக மீண்டும் வெளியே வந்து விழப்போய் ஒருவாறு என்னை பஸ்ஸினுள் நுழைத்துக்கொள்கிறேன்.

Friday, May 17, 2013

நீர்கொழும்பில் விபசாரிகளுக்கு ‘அசிட்’ வீச்சு எச்சரிக்கை சுவரொட்டிகள்


நீர்கொழும்பு நகர வர்த்தகப் பிதேசங்களின் சில இடங்களிலும் குறிப்பாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாகவும் விபசாரிகளுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள 'அசிட் வீச்சு' எச்சரிக்கை சுவரொட்டிகள் காரணமாக வீதியோர விபசாரிகள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, May 1, 2013

சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதை போட்டியில் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு பரிசு



 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால் சர்வதேச மட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் அபுதாபியை சேர்ந்த கவியன்பன் கலாம் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

Saturday, April 27, 2013

மின்சாரம் அது சம்சாரம்


(இக்கவிதை   (28-4-2013 ) "தமிழ் தந்தி" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது 


'கரன்ட் பில்' ஏறிபோச்சு
'கரன்ட்' பட்ட நிலையாச்சு
இருட்டுக்குள் வாழும் காலமாச்சு
வரண்டு போல நிலம் போல ஆச்சு

மின்னல் போல மின்சாரம் தாக்கியாச்சு
இன்னல் மழை பொழியும் வானமாச்சு
குப்பி விளக்கின் மவுசு கூடிபோச்சு
குப்பை போல வாழ்க்கையானதாச்சு


Saturday, April 20, 2013

இரு நூல்களின் ஆய்வரங்கு



தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' , சுமதி குகதாசனின் 'தளிர்களின் சுமைகள் ' ஆகிய நூல்களின் ஆய்வரங்கு எதிர்வரும் (ஏப்ரல); 28 ஆம் திகதி,  ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு 58,  தர்மாராம வீதி,  கொழும்பு 06. இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Wednesday, April 3, 2013

சட்டத்தை கையில் எடுத்துள்ள பொது பலசேனாவும் பேரினவாதிகளும்


- எம்.இஸட்.ஷாஜஹான் B.Ed

இலங்கை முஸ்லிம்களுக்கு சோதனைகளும் வேதனகளும் மிகுந்த காலம் இது. நாளுக்கு நாள் பேரினவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்டு