பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, August 20, 2018

எனக்கு ‘தமிழ்ச் சுடர்’ விருது


தடாகம் கலை இலக்கிய வட்டம் கொழும்பு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள்  அமைச்சிலுள்ள அஞ்சல் அலுவலக தலைமையக் கட்டட  கேட்போர் கூடத்தில்  சனிக்கிழமை (18-8-2018) நடத்திய  பன்னாட்டு படை விழாவில் கலை இலக்கிய சமூக சேவையை பாராட்டி எனக்கு 'தமிழ்ச் சுடர்'  விருது  வழங்கப்பட்டது.
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,

Sunday, August 19, 2018

தடாகம் கலை இலக்கிய வட்டம் நடத்திய பன்னாட்டு படை விழாவும் விருது வழங்கலும்


 தடாகம்  கலை இலக்கிய வட்டம் நடத்திய  பன்னாட்டு படை விழா  2018 நிகழ்வு சனிக்கிழமை (18-8-2018)  கொழும்பு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் அமைச்சிலுள்ள அஞ்சல் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைப் பெற்றது.
  தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில்  காலை 9 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரையும் பின்னர் பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரையும்  இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட 60 பேர்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Monday, June 25, 2018

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்த கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்கள் (PHOTOS)


கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் 1982 ஆம் ஆண்டில் கல்வி கற்ற  பழைய மாணவர் குழுவினர் (PEARLS OF HAMEEDIA)  தமக்கு கல்வி கற்பித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் பாடசாலைக்கு பல்வேறு வகையிலும் உதவி புரியும் பழைய மாணவர்களையும் விருது வழங்கி கௌரவித்தனர்.
 23-6-2018 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பு ரிச்வின் விளா (Richvin Villa)   இல்லத்தில் இடம்பெற்ற PEARLS OF HAMEEDIA பழைய மாணவர் குழுவின் ஒன்றுகூடல் மற்றும் இரவு விருந்து  நிகழ்வில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

Thursday, June 14, 2018

ஆன்மீக இன்பத்தை தந்த புனித ரமழான்



(வீரகேசரி பத்திரிகையில் நோன்புப் பெருநாள்  சிறப்பிதழில் 15-6-2018 அன்று பிரசுரமான கட்டுரை)

- எம். இஸட். ஷாஜஹான் 

ஒரு மாத காலம் ஆத்மீக இன்பத்தை தந்து அருள் மழை பொழிந்த புனித ரமழான் மாதம் நேற்றோடு எமை விட்டு பிரிந்து விட்டது. இன்று நாங்கள் புனித நோன்புப் பெருநாளை பெரு உவகையோடு கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.
இறை பள்ளிவாசல்களில் 'தக்பீர்' முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. இறையடியார்களின் உள்ளத்தில் உவகை பெருக்கெடுத்தோடுகிறது.

Sunday, May 13, 2018

கொழும்பு ஹமீத் அல்- ஹுசைனி தேசிய கல்லூரியின் பழைய மாணவர்கள் நடத்திய திறமைகளின் விழா(TALENT FIESTA G82)


கொழும்பு ஹமீத் அல்- ஹுசைனி தேசிய கல்லூரியில் 1982 ஆம் ஆண்டு கல்வி கல்வி கற்ற (PEARLS OF HAMEEDIYA)  பழைய மாணவர்கள் குழுவினர் கொழும்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் மத்தியில்  கலை இலக்கிய போட்டி நிகழ்ச்சிகளை (TALENT FIESTA G82's)  கடந்த சனிக்கிழமை (12-5-2018)  நடத்தியது.
1982 ஆம் ஆண்டு கல்வி கல்வி கற்ற (PEARLS OF HAMEEDIYA)  பழைய மாணவர்கள் குழுவின் தலைவர் தொழிலதிபர் எஸ். எஸ். யு. ஜெய்னுல் ஆப்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சு, சித்திரம், கைவினை பொருள் தயாரிப்பு, அறிவுக் களஞ்சியம் வினா விடைப் போட்டி,

Sunday, April 29, 2018

நீர்கொழும்பு நகரில் வெசாக் வலயம் அமைக்கப்பட்டு கொண்டாடப்படும் வெசாக் தினம் (PHOTOS)


நீர்கொழும்பு நகரில்  வெசாக் தினம் இம்முறை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நகரின் பல இடங்களிலும் தானசாலைகள், தோரணங்கள் மற்றும் வெசாக் கூடுகள்  அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நகரின் பிரதான விகாரைகளான அங்குருகாராமமுல்ல  போதிராஜ ராமய, அபயசேகராராமய அமைந்துள்ள பிரதேசம் வெசாக் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த இரண்டு விகாரைகளின் ஏற்பாட்டுடன் வொசாக்கூடு போட்டிகள் நடத்தப்படுவதுடன்  தோரணம் மற்றும் தான சாலைகள்; அமைக்கப்பட்டுள்ளன இதற்கு புத்தசாசன அமைச்சு, நீர்கொழும்பு மாநகர சபை ஆகியன அனுசரணை வழங்குகின்றன. 

Friday, March 9, 2018

நீர்கொழும்பில் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்புக் கூட்டம்: சர்வ மதத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்பு


 கண்டியில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து நீர்கொழும்பு நகரில் இன ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமலிருக்கும் வகையில் நீர்கொழும்பில் சர்வ மதத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள்,  பிரதேச அரசியல் முக்கியஸ்தர்கள்  கலந்து கொண்ட கூட்டம்   நேற்று வியாழக்கிழமை (8-3-2018) இரவு 8 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
 ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளர் ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் நீர்கொழும்பு  மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சகாவுல்லா,  நீர்கொழும்பு பிராந்திய 

Monday, January 29, 2018

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்


நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று திங்கட்கிழமை (29-1-2018) அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

படங்கள் - அணிகளுக்கிடையில் வலைப் பந்தாட்டப் போட்டி இடம்பெறுவதையும்,  போத்தலில் தண்ணீர் நிறைத்தல், பந்து போடுதல் போட்டிகள் இடம்பெறுவதையும் வலைப் பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற  அணிகளுக்கு அதிபர் எம். இஸட். ஷாஜஹான்  வெற்றிக்கிண்ணம் வழங்குவதையும், வெற்றி பெற்ற அணிகளுடன் அதிபர்

Tuesday, December 12, 2017

மணப் பெண் அலங்காரம் மற்றும் அழகுக் கலை பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு

மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட  மணப் பெண் அலங்காரம் மற்றும் அழகுக் கலை பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சி; பரிசளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-12-2017) அன்று நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் கலந்து சிறப்பித்தார். கெரவ அதிதிகளாக வைத்தியர் ரிம்ஸீனா

Wednesday, December 6, 2017

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா  இன்று  புதன்கிழமை (6-12-2017) பாடசாலை அதிபரான எனது (எம். இஸட். ஷாஜஹான்) தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட் சகோதரி எமலின் பிரதம அதிதியாகவும், அருட் சகோதரிகளான ஆன்மேரி, ஜுட், கிறிஸ்டா ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
   மாணவர்கள் பங்குபற்றிய வரவேற்பு நடனம் மற்றும் மூன்று மொழிகளிலும்  கரோல் கீதம்  என்பன நிகழ்வில்   இடம்பெற்றன.

Monday, November 27, 2017

Hameedians Fellowship Dinner – 2017

The Old Boys’ Association organized the Hameedians Fellowship Dinner – 2017 at Hotel Galadari, Colombo on 25th November 2017 in commemoration of the 133rd anniversary of the school. It paved the way for Old Hameedians to get together and review the progress made by the school as well as the contributions made by the OBA, G80’s, PPG, Hameedians FC, G99, OBA DUBAI and OBA QATAR. Six Old Hameedians were felicitated at the event by awarding Hameedians Fellowship Award for their outstanding contribution and support for the development of the school in education, sports, extracurricular activities and infrastructure development. The awardees were Al Haj Haroon Ahamed, Al Haj Zainul Abdeen, Al Haj Imthiyas Farook, Al Haj K. R. Mohamed Akram, Al Haj A. A. Mohamed Fowz and Mr. Faizal Buhary.

Sunday, November 26, 2017

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி தேசிய கல்லூரி பழைய மாணவர்களின் நட்புறவு இரவு விருந்து (HAMEED AL HUSSEINIE COLLEGE FELLOWSHIP DINNER 2017)

 நான் கல்வி கற்ற கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி தேசிய கல்லூரிக்கு தற்போது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 133 வருடங்களாகின்றன. கொழும்பில் உள்ள பிரபல முஸ்லிம் ஆண் பாடசாலையான எமது பாடசாலையில் கல்வி கற்றவர்களில் பலர்  பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
எமது கல்லூரியின் பழைய மணவர் சங்கத்தினர் நேற்று சனிக்கிழமை (25-11-2017) இரவு Colombo Galadari Hotel இல் நட்புறவு இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்தனர். இதில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
1980 இறகு பின் கல்வி கற்றவர்களும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்வி கற்ற பலரும் நிகழ்வில் பங்கு பற்றினர்.

Thursday, June 1, 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம் சிறைச்சாலைக்கு அமைச்சர் சுவாமிநாதன் திடீர் விஜயம்: நேரடி ரிப்போர்ட்


 நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருநது நான்கு விளக்கமறியல் கைதிகள் கடந்த  செவ்வாய்க்கிழமை (30-5-2017) அதிகாலை  1.30 மணியளவில் தப்பியோடியமையை அடுத்து சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலில் துளையை (ஓட்டையை) எற்படுத்தி  கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியுள்ள கைதிகள் பல்வேறு  சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களாவர். அவர்களில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.
சத்துர மதுசங்க (25 வயது), விபுல சுரங்க முனசிங்க (19 வயது), பி. ஜயகுமார். (26 வயது), மொஹமத் நவுபர் தவுபீக் முஹம்மத் நஸீம் (26 வயது) ஆகியோரே

Tuesday, May 30, 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

 நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் இன்று   (30-5-2017) அதிகாலை 1.30 மணியளவில் தப்பியோடியுள்ளனர்.
 சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலை உடைத்துக் கொண்டு கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிய வருகிறது. அந்த மதிலில்  ஒன்றரை அடி துளையை (ஓட்டையை) எற்படுத்தி  இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியுள்ள கைதிகள் பல்வேறு  சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருபவர்களாவர். அவர்களில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டுள்ளவராவார்.

Saturday, April 22, 2017

நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் நீர்கொழும்பில் நடைபெற்ற தமிழ், சிங்கள புத்தாண்டு விழா விளையாட்டுப் போட்டிகள்

மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில்  தமிழ், சிங்கள புத்தாண் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்று சனிக்கிழமை (22-4-2017)  நீர்கொழும்பில் நடைபெற்றது.
 நீர்கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து செத் சரண அமைப்பு, கொழும்பு கரிடாஸ் அமைப்பு  ஆகியன இணைந்து இந்த புத்தாண்டு விழாவை நீர்கொழும்பு கொட்டுவ மைதானத்தில் நடத்தின.
இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், செத் சரண அமைப்பு, கொழும்பு கரிடாஸ் அமைப்பு  ஆகியவற்றின் முக்கியஸ்த்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday, April 14, 2017

சித்திரை புத்தாண்டையிட்டு நீர்கொழும்பு ஆலயங்களில் இடம்பெற்ற விசேட பூஜைகள்

சித்திரை புத்தாண்டையிட்டு நீர்கொழும்பில் அமைந்துள்ள ஆலயங்களில் இன்று (14) காலை விசேட பூஜைகள் இடம்பெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையானோர்  பங்குபற்றினர்.

 நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ சிங்கமா காளி அம்பாள் ஆலயம் ஆகியவற்றில்  இன்று (14-4-2017)  காலை இடம்பெற்ற

Thursday, April 13, 2017

60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குமாறு வலியுறுத்தி சைக்கிளில் சாதனைப் பயணம்

 இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் இன, மத, மொழி பாகுபாடின்றி போதுமான அளவு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை, அரசாங்கம் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் சகல முதியவர்களும் சுயகௌரவத்துடனும். நிம்மதியாகவும் வாழ வகை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தின் கவனத்தை இந்த விடயம் தொடர்பாக ஈர்க்கும் நோக்கில் 1515 கிலோமீற்றர் சாதனைப் பயணத்தை சைக்கிளில் ஆரம்பித்துள்ள வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த  தர்மலிங்கம் பிரதாபன் நேற்று (12-4-2017) இரவு 8 மணியளவில்   கொழும்பு நோக்கி செல்லும் வழியில் நீர்கொழும்பு நகரை வந்தடைந்தார்.

Friday, February 10, 2017

தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் கலை விழா (படங்கள்)

 நீர்கொழும்பு தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலய மாணவர்களின் கலை விழா வெள்ளிக்கிழமை (10-2-2017) மாலை  நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில்  தலைவர் ஜி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் , வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர். எம்.இஸட். ஷாஜஹான்தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய பிரதி அதிபர் செல்வகுமார் , நுவரெலிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி எஸ்.பாமினி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

Wednesday, January 11, 2017

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப நிகழ்வு (படங்கள்)

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை பாடசாலை அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில்  புதிய மாணவர்கள் தரம் இரண்டில் கற்கும் மாணவர்களால் மலர்ச் செண்டு வழங்கி வரவேற்கப்படுவதையும், ஆசிரியர்களால் வகுப்பறைக்கு அழைத்துச் செல்லப்படுவதையும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாற்சோறு வழங்குவதையம்,

Thursday, January 5, 2017

நீர்கொழும்பு வலய பாடசாலை அதிபர்களுக்கு நத்தார் பரிசு வழங்கிய மாணவர்கள்

நீர்கொழும்பு வலய  கல்விக் காரியாலயத்தினால் நீர்கொழும்பு வலய பாடசாலை அதிபர்களுக்காக   பமுனுகம கொன்ஸல்வேஸ் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (5) நடத்தப்பட்ட மாதாந்த கூட்டத்தின் போது அந்த பாடசாலையினால்  பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு நத்தார் பரிசு வழங்கப்பட்டது.
கொன்ஸல்வேஸ் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ஆனந்த விதான மற்றும் கல்லூரியின் மாணவர் தலைவர்களினால் நத்தார் பரிசு வழங்கப்பட்டதுடன் நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.