பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, March 1, 2011


MEEPURA எனும் நீர்கொழும்பு பிரதேச பத்திரிகையில் பிரசுரமான எனது பேட்டி
(2011 பெப்ரவரி இதழ்)






Thursday, February 24, 2011

விடிவெள்ளி பத்திரிகையில் 24-2-2011 அன்று பிரசுரமான படம்

Thursday, February 17, 2011

நபிபெருமானார் ஜன்ன தினத்தையிட்டு 16-2-2011 அன்று வீரகேசரி பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரை

Wednesday, January 26, 2011

புதிய சிறகுகள் லங்கா கலை விழாவில் விருது
25-1-2011 அன்று கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற புதிய சிறகுகள் லங்கா கலை விழாவில் விருது கிடைத்தது.
கலை விழாவையிட்டு திறந்த போட்டியாக நடத்தப்பட்ட பாடல் இயற்றுதல் போட்டியியில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளமைக்காக விருது வழங்கப்பட்டது.அத்துடன் நான் ​எழுதிய ஆய்வு கட்டுரைக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.மனித உரிமை தொடர்பான போட்டி நிகழ்ச்சிக்காக ஆய்வு கட்டுரை சமர்பித்திருந்தேன்.

Friday, December 31, 2010

Happy New Year-2011

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்துக்கள்

புத்தாண்டே வா!

சில நம்பிக்கை பூக்களை

தூவி விட்டு வரும்

புத்தாண்டே வா!

மாற்றங்ளை நம்பியே

ஏமாற்றங்ளை சந்தித்த

வருடங்கள் போல் அல்லாது

ஆரோக்கியமாய் வா

புதிய ஆண்டே!

நம்பிக்கை தரும்

உன் புதிய உதிப்பில்

உறுதியாய் தங்கியிருக்கிறது

எமது தேசத்தவர்களின் நல்வாழ்வு!!

இனிய ஆண்டே!

இனிமைகளை தா ...!!!

Tuesday, November 16, 2010


Haj festival day
17-11-2010 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் ஹஜ் பெருநாள் பற்றி நான் எழுதிய கட்டுரை இது.


Sunday, August 8, 2010


முத்தையா முரளிதரன் பற்றி நான் எழுதி வீரகேசரியில் 4-8-2010 அன்று பிரசுரமான கவிதை

Saturday, July 24, 2010

எனக்கு சமாதான நீதிவான் பதவி கிடைத்தது தொடர்பாக தினகரன் பத்திரிகையில்11-7-2010 அன்று வெளிவந்த செய்தி இது.


Wednesday, June 2, 2010

Sunday, May 9, 2010

2-5-2010 அன்றைய தினகரன் வாரமஞ்சரி கதம்பம் பகுதியில் பிரசுரமான என்னைப் பற்றிய கட்டுரை

Tuesday, November 24, 2009

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற
தொலைக் காட்சி நாடக பிரதியாக்கப் போட்டியில் விருது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 1999 ஆம் ஆண்டு இளைஞர் விருது வழங்கள் விருது விழாவுக்காக அகில இலங்கை ரீதியில் நடத்திய தொலைக் காட்சி நாடக பிரதியாக்கப் போட்டியில் நான் முதலாம் இடம் பெற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம் விருது பெறும் காட்சி.பரிசளிப்பு நிகழ்வு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

Sunday, November 15, 2009

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 1999ஆம் ஆண்டு, மாணவ சாகித்திய விழாவுக்காக உயர்கல்வி நிறுவனங்களில் கற்கும் மாணவர்களுக்காக அகில இலங்கை ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான் முதல் பரிசாக விருது பெறும் காட்சி.

Friday, October 23, 2009

1999 ஆம் ஆண்டு சமய கலாசார அமைச்சு தேசிய ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் முதலாமிடம் பெற்று தேசிய சாகித்திய விழாவில் பரிசு பெறும் காட்சி.

2000 ஆம் ஆண்டு "சிலுமின" சிங்களப் பத்திரிகை தேசிய ரீதியில் நடத்திய தேசிய ஐக்கிய சாகித்திய விழாவுக்கான கவிதைப் போட்டியில் 3 ஆம் இடம் பெற்று பரிசு பெறும் காட்சி.
2002 ஆம் ஆண்டு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஆசிரியர் தின கௌரவிப்பின் போது மேல்மாகான முதமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடமிருந்து பரிசு பெறும் காட்சி.


1999 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பிதேச சாகித்திய விழாவில் கவிதை போட்டியில் முதலாம் பரிசு பெறும் காட்சி.நீர்கொழும்பு மேயர் ஆனந்த முனசிங்க பரிசு வழங்குகிறார்.


2002 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலை கழகத்தில் இதழியல் துறை தொடர்பான டிளோமா பட்டம் பெறும் காட்சி.


கல்வி அமைச்சு அகில இலங்கை ரீதியில் நடத்திய சுனாமி தொடர்பான பாடலாக்கப் போட்டியில் நான் முதலாமிடம் பெற்றேன். 1-8-2005 அன்று தேசிய நூலபிவிருத்தி சபையின் தலைவர் குனசேனவிதானவினால் 25 ஆயிரம் ரூபா பரிசு வழங்கப்படும் காட்சியும், பரிசு பெற்ற ஏனைய கவிஞர்களுடன் உள்ள காட்சியும்.




1993 ஆம் ஆண்டு சிங்களத் திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவுடன்.


1991 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளையாட்டு வர்னணையாளராக நான் கடமையாற்றினேன். விளையாட்டு வர்னணையாளர்களுக்கு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வழங்கப்பட்ட பயிற்சிநெறியின் பின்னர் அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட படம்.


பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற -(ஆசிரியர் பயிற்சி நெறி) வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.


1-9-1995 ஆம் ஆண்டு கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் கலை விழாவில்-(பம்பலப்பிட்டி – புதிய கதிரேசன் மண்டபத்தில் ) வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.




24-9-1984 ஆம் ஆண்டு கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் கலை விழாவில்-
(டவர் மண்டபத்தில் ) “இப்படியும் சில மனிதர்கள் “ நாடகத்தில் நான் தோன்றும் காட்சி.


Tuesday, September 22, 2009

"ஏன் இந்த மௌனம்" வெளியீட்டு விழா

எனது நான்காவது கவிதைத் தொகுதியான “ஏன் இந்த மௌனம்" வெளியீட்டு விழா 27-11-1999 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலைஞர் கலைச்செல்வன், கவிஞர் கலைவாதி கலீல், கவிஞர் மேமன் கவி , கவிஞர் இளநெஞ்சன் முர்ஸிதீன், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் கணேசலிங்கம், பாடசலை ஆசிரியர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். கலைஞர் கலைச்செல்வன், கவிஞர் கலைவாதி கலீல் ஆகியோர் நூல் விமர்சனம் செய்தனர். கவிஞர் இளநெஞ்சன் முர்ஸிதீன் கவி வாழ்த்து நிகழ்த்தினார்.அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் சில வருமாறு.