எமது
ஊரில் எமது வீட்டுக்கு அருகாமையில் காமாச்சோடை என்ற இடம் இன்றும் அதேபெயருடன் அழைக்கப்படுகிறது. கடற்கரையை அண்டியிருக்கும் இந்த இடத்தில்தான் பள்ளிவாசல், முஸ்லிம் பாடசாலை, மீன்கடை, கூட்டுறவுச்சங்கத்தின் அரசிமூடைகள் பாதுகாக்கப்படும் பெரிய களஞ்சிய மண்டபம், மரக்கறி சந்தை, இறைச்சிக்கடை, கிங்ஸ் தியேட்டர் , கள்ளுத்தவறணை, விளையாட்டு மைதானம் யாவும் இருந்தன.
ஒருகாலத்தில்
இந்த இடத்தில் அமைந்திருந்த ஒரு காமாட்சி அம்மன் கோயிலை கடலால் வந்து ஆக்கிரமித்த போர்த்துக்கீசர் இடித்துவிட்டனர். அதன் சுவடே மறைந்துவிட்டதாக எனது பாட்டி சிறுவயதில் சொல்லியிருக்கிறார்.
தற்பொழுது அவ்விடத்தில் நிறைய மாற்றங்கள் நேர்ந்துவிட்டன.
மீன்கடை, இறைச்சிக்கடை, அரிசிக்களஞ்சியம், கிங்ஸ் தியேட்டர் என்பன மறைந்துவிட்டன.
ஆனால், இன்றும் அங்கே பள்ளிவாசலும், பாடசாலையும் இயங்குகின்றன. பள்ளிவாசல் தெருவில் காலாதிகாலமாக முஸ்லிம் மக்களும் செறிந்துவாழ்கிறார்கள்.