பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, February 10, 2017

தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் கலை விழா (படங்கள்)

 நீர்கொழும்பு தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலய மாணவர்களின் கலை விழா வெள்ளிக்கிழமை (10-2-2017) மாலை  நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில்  தலைவர் ஜி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் , வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர். எம்.இஸட். ஷாஜஹான்தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய பிரதி அதிபர் செல்வகுமார் , நுவரெலிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி எஸ்.பாமினி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

Wednesday, January 11, 2017

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப நிகழ்வு (படங்கள்)

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை பாடசாலை அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில்  புதிய மாணவர்கள் தரம் இரண்டில் கற்கும் மாணவர்களால் மலர்ச் செண்டு வழங்கி வரவேற்கப்படுவதையும், ஆசிரியர்களால் வகுப்பறைக்கு அழைத்துச் செல்லப்படுவதையும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாற்சோறு வழங்குவதையம்,

Thursday, January 5, 2017

நீர்கொழும்பு வலய பாடசாலை அதிபர்களுக்கு நத்தார் பரிசு வழங்கிய மாணவர்கள்

நீர்கொழும்பு வலய  கல்விக் காரியாலயத்தினால் நீர்கொழும்பு வலய பாடசாலை அதிபர்களுக்காக   பமுனுகம கொன்ஸல்வேஸ் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (5) நடத்தப்பட்ட மாதாந்த கூட்டத்தின் போது அந்த பாடசாலையினால்  பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு நத்தார் பரிசு வழங்கப்பட்டது.
கொன்ஸல்வேஸ் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ஆனந்த விதான மற்றும் கல்லூரியின் மாணவர் தலைவர்களினால் நத்தார் பரிசு வழங்கப்பட்டதுடன் நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Saturday, December 31, 2016

நீர்கொழும்பு நகரில் புத்தாண்டு சமய நிகழ்ச்சி (PHOTOS)

 நீர்கொழும்பு  நகரில்  அமைந்துள்ள தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில்  பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். அத்துடன்; பெரியமுல்லையில் அமைந்துள்ள 'மஸ்ஜித் பஸ்ல்' முஸ்லிம் பள்ளிவாசலில் (Ahmadiya Muslim Mosque) அதிகாலை 4.20 மணியளவில் புத்தாண்டையிட்டு விசேட தொழுகை , உரை மற்றும் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன. மௌலவி அஸ்மத் அஹம்மத் புத்தாண்டு நற்சிந்தனை உரையை நிகழ்தினார்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புதிய ஆண்டு சகலருக்கும் நன்மைகள் தருகின்ற ஆண்டாக அமையட்டும்.

வாழ்த்துக்களுடன்

எம். இஸட். ஷாஜஹான் (KALANENJAN SHAJAHAN)



Saturday, December 24, 2016

உலகின் மிக உயரமான நத்தார் மரம் (வீடியோ)

உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று  கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெரும் எண்ணிக்கையான மக்கள் நத்தார் மரத்தை பார்க்க வந்தவாறு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதேவேளை, கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு தெரிவித்துள்ளது.

Saturday, December 17, 2016

காலஞ்சென்ற கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரருக்கு திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்திய முஸ்லிம்கள்

நீர்கொழும்பு நகரின் பிரதான விகாரையான அங்குருகாரமுல்ல  போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் (62 வயது) கடந்த செவ்வாய்க்கிழமை (13) இயற்கை எய்தினார்.  
 நீர்கொழும்பில் வாழும் சகல  இனமத  மக்களினதும் பெருமதிப்பை பெற்றுள்ள ஞானசிரி தேரர் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி விகாரையின் விகாராதிபதியாக சேவையாற்றி வந்தார். அவர் அகில இலங்கை சமாதான நீதவானாக சேவை புரிந்ததுடன் பல்வேறு சமூக பணிகளையும் ஆற்றி வந்தார்.

Wednesday, December 14, 2016

உலகம் போற்றும் சமாதானத் தூதர் முஹம்மத் நபி

(12-12-2016 அன்று   இக்கட்டுரை வீரகேசரியில் பிரசுரமானது.)

-     எம்..இஸட். ஷாஜஹான்

உலகம் போற்றிப் புகழும் உத்தமத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் இன்று (12-12-2016) கொண்டாடுகின்றனர்.
நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை  எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது  (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (அல்குர்ஆன் 68:4)

நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் காலமானார்


நீர்கொழும்பு நகரின் பிரதான விகாரையான அங்குருகாரமுல்ல  போதிராஜாராம  விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.

 நீர்கொழும்பில்  சகல  இன மக்களினதும் பெருமதிப்பை பெற்றுள்ள ஞானசிரி தேரர் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி விகாரையின் விகாராதிபதியாக சேவையாற்றி வந்தார்.

இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை (17) மாலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 30, 2016

வெலிஹேன றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா (படங்கள்)

நீர்கொழும்பு கல்வி வலயத்தின் கட்டானைக் கோட்டத்தைச் சேர்ந்த வெலிஹேன றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் இன்று புதன்கிழமை (30) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட் தந்தை அமில கோமிஸ், அருட் சகோதரிகள், தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பிரிட்டோ மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, November 27, 2016

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து எக்ஸ்ரே பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்   கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து  தீ விபத்து இடம்பெற்ற  புனரமைப்பு செய்யப்படும் ஆறு மாடிக் கட்டடத்தில்  தற்காலிகமாக இயங்கி வந்த வந்த எக்ஸ்ரே பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புனரமைப்பு செய்யப்பட்டு வரும் வைத்தியசாலை கட்டிடத்தின் கீழ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை  திடீரென தீப்பிடித்தது. மின்சாரம் விநியோகிக்கும் (பெனல்போர்ட்)  அறையில்

Wednesday, February 3, 2016

68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் - video

இன்று கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடைபெற்ற 68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 1949 ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின வைபமொன்றின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
கடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது தேசிய கீதம் தமி­ழிலும், பாடலாம் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.இந்தத் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ, தூய்­மை­யான ஹெல­உ­று­மய கட்­சியின் தலை­வரும் எம்.பி.யுமான உதய கம்­பன்­பில ஆகியோர் கடும் எதிர்ப்­புக்­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

Wednesday, January 27, 2016

சக்தி, சிரஸ தொலைக்காட்சி சேவைகளின் சிறந்த சிறந்த 'யூ ரிப்போர்ட்' ஊடகவியலாளருக்கான விருது எம்.இஸட். ஷாஜஹானுக்கு

 சக்தி தொலைக்காட்சி சேவை, சிரஸ தொலைக்காட்சி சேவை, எம்.ரி.வி. தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின்  'யூ ரிப்போர்ட்' (News 1 st U- report)   செய்திப் பிரிவின்  ஏற்பாட்டில் மேல் மாகாணத்திற்கான சிறந்த   'யூ ரிப்போர்ட்' (U- report) நிருபருக்கான (U- report Eagle 2014/2015 Award)  விருது வழங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (24-1-2016) களுத்துறை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கம்பஹா, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களில் சிறந்த   'யூ ரிப்போர்ட்' ஊடகவியலாளர்களாக தெரிவு செய்யப்பட்ட மூவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கம்பஹா மாவட்டத்திற்கான விருது எனக்கு (எம்.இஸட். ஷாஜஹான்) வழங்கப்பட்டது.

Wednesday, December 23, 2015

மனித குலத்தை சீர்த்திருத்திய மாநபி - எம்.இஸட்.ஷாஜஹான்

உலகிற்கு அருட்கொடையாக உதித்த உலகம் போற்றும் உத்தமத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஜனன தினம் இன்றாகும்.
 முஹம்மத் நபியவர்கள் மனித குலத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவராவார். அவர்களின் வருகையே மனித குல மீட்சிககு அடித்தாளமிட்டது.
அண்ணல் நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.மனிதப் பண்பாட்டையே உயர்த்திக் காட்டிய உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை  சரித்திரம் புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறது.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை  எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது  (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Friday, November 27, 2015

கட்டானை கந்தவலை பிரதேசத்தில் ஓல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் உடைந்து வீழ்ந்தது

கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஓல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட  200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளது.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்  புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்ட  60 அடி உயரமான இந்த கோபுரம் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

Saturday, November 21, 2015

பிரதேச, மாவட்ட சாகித்திய விழா போட்டிகளில் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு நான்கு பரிசில்கள்

 நீர்கொழும்பு பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து  2015 ஆம் ஆண்டுக்கான பிரதேச சாகித்திய கலா மகோற்சவத்திற்காக நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளில் எனக்கு இரண்டு முதலாமிடங்கள் கிடைத்துள்ளன.

  திறந்த போட்டிப் பிரிவில் கவிதை மற்றும் பாடலாக்கம் ஆகிய போட்டிகளிலேயே  எனக்கு   இரண்டு முதலாமிடங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் கம்பஹா மாவட்ட செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து மாவட்ட சாகித்திய கலா மகோற்சவத்திற்காக (2015) நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளிலும்  அடியேனுக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. கம்பஹா மாவட்டத்தில் 

Friday, November 13, 2015

திரும்பிப்பார்க்கின்றேன். முஸ்லிம் சகோதரர்களே அல்லாவின் நாமத்தால் அவர்களை மன்னித்துவிடுங்கள். யாழ்ப்பாணம் உங்களை அழைக்கட்டும். முஸ்லிம் வட்டாரத்தில் உங்கள் பாங்கோசை ஒலிக்கட்டும். இரண்டு குழந்தைகள் உலகிற்குச்சொன்ன ஞானோபதேசம் - முருகபூபதி - அவுஸ்திரேலியா

எமது  ஊரில்  எமது  வீட்டுக்கு  அருகாமையில்  காமாச்சோடை   என்ற இடம்   இன்றும்  அதேபெயருடன்  அழைக்கப்படுகிறது.   கடற்கரையை அண்டியிருக்கும்    இந்த  இடத்தில்தான்  பள்ளிவாசல்,   முஸ்லிம்  பாடசாலை,   மீன்கடை,   கூட்டுறவுச்சங்கத்தின்  அரசிமூடைகள்  பாதுகாக்கப்படும்    பெரிய  களஞ்சிய  மண்டபம்,   மரக்கறி  சந்தை, இறைச்சிக்கடை,    கிங்ஸ்   தியேட்டர்   , கள்ளுத்தவறணை,   விளையாட்டு மைதானம்   யாவும்  இருந்தன.
ஒருகாலத்தில்  இந்த  இடத்தில்  அமைந்திருந்த  ஒரு  காமாட்சி  அம்மன் கோயிலை   கடலால்  வந்து  ஆக்கிரமித்த  போர்த்துக்கீசர்  இடித்துவிட்டனர். அதன்  சுவடே   மறைந்துவிட்டதாக  எனது  பாட்டி  சிறுவயதில் சொல்லியிருக்கிறார்.
தற்பொழுது   அவ்விடத்தில்  நிறைய மாற்றங்கள்  நேர்ந்துவிட்டன.
மீன்கடை,    இறைச்சிக்கடை,    அரிசிக்களஞ்சியம்,   கிங்ஸ்  தியேட்டர்  என்பன மறைந்துவிட்டன.   ஆனால்,  இன்றும்  அங்கே  பள்ளிவாசலும், பாடசாலையும்    இயங்குகின்றன.    பள்ளிவாசல்  தெருவில்    காலாதிகாலமாக   முஸ்லிம்  மக்களும்   செறிந்துவாழ்கிறார்கள்.

Sunday, November 1, 2015

வாழ்த்துப்பா

 ( நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளி விழா 'கலை விழா' ஞாயிற்றுக்கிழமை (1-11-2015) மாலை அஹ்மதியா ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அடியேன் வாழ்த்துப் பா வாசிக்கும் காட்சியும், சபையோரும்)   

                 வெள்ளி விழாக் காணும்
                        அஹ்மதிய்யா பள்ளிக் கூடமே
                   துள்ளி;த் திரியும் பாலகர்கள்
                        அறிவைத் தேடும் கூடமே!

                   வண்ணத்துப் பூச்சிகள்
                        பறக்கும் சோலையே
                   சின்னஞ் சிறு சிறுவர்கள்
                        கல்வி கற்கும் சோலையே!

                   சீர் கல்வி நற்பண்பு
                        பாலர் வகுப்பிலே
                   வேர் பதிக்கும் நிச்சயமாய்
                       ‘அஹ்மதிய்யா' வகுப்பிலே!

Tuesday, September 29, 2015

நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழா -2015 இல் எனக்கு 3 பரிசுகள்

கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன்  இணைந்து நீர்கொழும்பு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த 'நீர்கொழும்பு பிரதேச சாகித்திய மகோற்சவம்' இன்று செவ்வாய்க்கிழமை (29-9-2015) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர். அலவத்த தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். பிரபல சிங்கள கலைஞரும் அறிவிப்பாளரும் பாடலாசிரியருமான  வசந்த துக்கன்னாரால விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு சாகித்தியம் தொடர்பாக உரையாற்றினார்.