பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, September 22, 2009

"ஏன் இந்த மௌனம்" வெளியீட்டு விழா

எனது நான்காவது கவிதைத் தொகுதியான “ஏன் இந்த மௌனம்" வெளியீட்டு விழா 27-11-1999 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலைஞர் கலைச்செல்வன், கவிஞர் கலைவாதி கலீல், கவிஞர் மேமன் கவி , கவிஞர் இளநெஞ்சன் முர்ஸிதீன், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் கணேசலிங்கம், பாடசலை ஆசிரியர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். கலைஞர் கலைச்செல்வன், கவிஞர் கலைவாதி கலீல் ஆகியோர் நூல் விமர்சனம் செய்தனர். கவிஞர் இளநெஞ்சன் முர்ஸிதீன் கவி வாழ்த்து நிகழ்த்தினார்.அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் சில வருமாறு.