பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, December 10, 2011

ஞாபக மறதியும் நினைவாற்றலும்

          - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed 


 இன்றைய அவசர யுகத்தில் ஞாபக மறதி என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. சிலருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஓரளவு ஞாபக மறதி இருக்கும்.

ஞாபக மறதியை நோய் என்றும் சிலர் கூறுவர். அது போல் நினைவாற்றலை ஒரு கலை என்றும் கூறுவர்.

ஞாபக மறதி காரணமாக இழப்புக்களும் பின்னடைவுகளும், அசௌகரியங்களும், எதிர் மறையான விடயங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. இருந்த போதிலும் ஞாபக மறதி காரணமாகவே

Friday, December 9, 2011

மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்க 

வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்


                 - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


புகைத்தல் மற்றும் மதுபான பழக்க வழக்கங்களினால் ஏற்படும் தீங்குகள் ஏராளம்.

இவை மனித ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் பரந்துபட்ட சமூக மட்டத்திலும் அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அத்துடன் மனிதனின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

மேற்கத்தேய கலாசாரத்தின் உள்வாங்கலே புகைத்தல், மதுபான பழக்க வழக்கங்கள் என்பனவாகும்.

Thursday, December 8, 2011

கோபத்தை தவிர்த்து சுகதேகியாக வாழ்வோம்      

          - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


அவசர யுகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை பலர் பரபரப்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் தவிக்கும் பெரும்பாலானவர்கள்  கோபப்படுவதும் அதிகரித்தே காணப்படுகிறது.

மனித உணர்ச்சிகளின் ஒன்றுதான் கோபம் என்ற உணர்வு வெளிப்பாடாகும். கோபம் நல்ல
பக்கற்றுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகள் தொடர்பில்
கவனம் செலுத்துவோம்


- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


எல்லோருக்கும்  மிகவும் பிடித்த ஒன்றுதான் ஐஸ்கிறீம். குறிப்பாக சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக ஐஸ்கிறீம் உள்ளது.  உணவின் பின் டெஸர்ட் ஆகவும் பலரும் ஐஸ்கிறீம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அந்த ஐஸ்கிறீம் சாப்பிடுவதற்கும் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஆம் விற்பனை  நிலையங்களில் பிளாஸ்ரிக் பக்கட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகளைத்தான்   இங்கு குறிப்பிடுகிறோம்.

Wednesday, November 9, 2011

ஜெயகாந்தனுக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த 


விருது அறிவிப்பு!


சென்னை: எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷிய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரன்ட்ஷிப்) வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Tuesday, October 25, 2011

கடாபியின் பெயரில் கணனி வைரஸ்கள்

லிபியாவின் முன்னாள் அதிபர் முகம்மர் கடாபி கொல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளி வந்தபடியுள்ளன.
கடாபி தொடர்பான செய்திகளின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதே இதற்கான காரணமாகும். 

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


Thursday, October 6, 2011


ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்
      
நியூயார்க்: கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் (வயது56) நேற்று மரணமடைந்தார்.

Tuesday, October 4, 2011

‘ பேஸ் புக்' தொடர்பாக 1000 முறைப்பாடுகள்

பேஸ் புக்' சமூக வலைத்தளத்தின் மூலம் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகக் கடந்த 10 மாதக் காலப்பகுதியில் 1000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணினி அவசர பொறுப்புக் கூறல் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கணனி அறிவுடையோர் உள்ள நாடுகளில் இலங்கைக்கு 66 ஆவது இடம்.

இலங்கையில் கணனி அறிவுடையோர் 35 சதவீதமாக உள்ளதாகவும் இ உலகளாவிய ரீதியில் கணனி அறிவுடையோர் அதிகம் வசிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை 66 ஆவது இடத்தை பெற்றுள்ளதாவும் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நிமால் ஆனந்த அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.

Saturday, September 24, 2011


கலாபூசணம் பீர் முஹம்மதின் 'நேர்மை பிறந்தது' இறுவட்டு வெளியீட்டு விழா

இலங்கையின் மூத்த இஸ்லாமியப் பாடகர் கலாபூசணம் பீர்முஹம்மதின் 'நேர்மை பிறந்தது'  இஸ்லாமிய கீதங்கள் இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு மாளிகாவத்தை சின்ன பிரதீபா மண்டபத்தில்  மாலை 6.30 மணிக்கு  நடைபெறவுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக இஸ்லாமிய கீதங்களை பாடியிருக்கும் பாடகர் பீர்முஹம்மத் தேனிசை மாமணி,கவித் தென்றல், மியூசிக் நூரி போன்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 30, 2011


நோன்புப் பெருநாள் தினத்தில் ரமழான் கற்றுத் தந்த போதனைகளை நினைப்போம்


புண்ணியம் பொழிந்த மாதம் எம்மை  விட்டு பிரிந்து விட்டது. கண்ணியமிகு மாதம் எம்மை விட்டு அகன்று விட்டது.
ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு ஷவ்வால் மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

Monday, August 22, 2011

லண்டன் தமிழ் இணைய வானொலியில் எனது
 (கலாநெஞ்சன் ஷாஜஹானின்)  பேட்டி
லண்டன் தமிழ் இணைய வானொலியில் (www.firstaudio.net) 21-8-2011 அன்று ஒலிபரப்பான கீதாஞ்சலி நிகழ்ச்சியில் எனது பேட்டி இடம் பெற்றது. கீதாஞ்சலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சஹிபா பேகம் என்னை பேட்டி கண்டார்.அதனை இங்கு கானொளியாக தருகிறேன்.உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.


Wednesday, August 17, 2011

கிறீஸ் மனிதனும் அப்பாவிக் காதலும்

(படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள் பெரிதாகத் தெரியும்)


Saturday, August 13, 2011


நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை 
பாதித்துள்ள கிறீஸ் பூதம்


நாட்டின் பல இடங்களிலும் கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சினை தலை விரித்தாடுகிறது.இதன் காரணமாக பல இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்துடன் அப்பாவிகள் சிலர் கொல்லப்பட்டும் பலர் தாக்கப்பட்டுமுள்ளனர். இச் சம்பவம் தினமும் தொடர் கதையாகிவருகிறது.
ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலர் கொள்ளை ,திருட்டு, வழிப்பறி மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

நடிகை ருக்மணி தேவியின் கல்லறையும்

மனித நாகரிகமற்ற அரசியல்வாதியும்



மறைந்த பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் பாடகியுமான ருக்மணி தேவியின் கல்லறை உட்பட சிலை இனந் தெரியாத நபர்களால் 12-8-2011 அன்று உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது.

Friday, August 5, 2011


வீரகேசரி பத்திரிகை 81 ஆவது அகவையில்


இலங்கையின் பிரபல தமிழ் தினசரி பத்திரிகையான வீரகேசரி பத்திரிகை 80 வருடங்களை பூர்த்தி செய்து இன்று 81 அகவையில் காலடி எடுத்து வைக்கிறது.
இப் பத்திரிகை 1930 ஆம் ஆண்டில் ஆரம்பமானது. இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு அது அளப்பரிய சேவைகளை செய்துள்ளது. நடு நிலைமை தவறாது அது தரும் செய்திகளை யாவரும் பாராட்டுவர்.
நவீன கணனி மயமான பத்திரிகையாக அது மாறியுள்ளதுடன் இணையத் தினூடாகவும்  அது உலகெல்லாம் வளம் வருகிறது. வீரகேசரி நிறுவனம் மேலும் பல வெளியீடுகளையும் வெளியிடுகிறது.

Tuesday, August 2, 2011


வையகம் போற்றும் வான் மறை

இனிய திருக்குர்ஆனே!
இறை மறையே!
v   
நீ!
உலகின் இருளை
ஒழிக்க வந்த பேரொளி!
v   
ஆராய்பவர்களுக்கு
அட்சய பாத்திரம்!
v   
அறிவின் வேர்
வேருக்கு நீர்!
v   
அஞ்ஞானத்தின் பலி பீடம்
விஞ்ஞானத்தின் ஆய்வு கூடம்!
v   
ஆத்மீக சூரியன்
லௌகீக சந்திரன்!
v   

சாந்தி நபியின்
சமாதான தூது!
v   

Monday, August 1, 2011

​( நோன்பு தொடர்பாக நான் எழுதிய இக் கட்டுரை 1-8-2011 வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. )
புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்
"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

ஆம்! உலக முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் ஒரு முறை புனித ரமழான் வந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.

புண்ணியம் மொழியும் கண்ணியமிகு மாதமான இம்மாதம் பாவக் கறையகற்றும் மாதமாகும். பதினொரு மாதமும் நாம் செய்த பாவங்களை கழுவி பரிசுத்தப்படுத்துவதற்காக இனிய நோன்பு வருடத்தில் ஒரு தடவை வருகிறது.

Thursday, July 28, 2011


படங்களின் மேல் கிளிக் செய்யுங்கள் பெரிதாகத் தெரியும்

Wednesday, July 27, 2011

படங்களின் மேல் கிளிக் செய்யுங்கள் பெரிதாகத் தெரியும்




Tuesday, July 12, 2011


கவிப் பேரரசு வைரமுத்து வாழ்கவே!

(இன்று வைரமுத்துவின் 58 ஆவது பிறந்த தினம்)

தமிழ் உலகின்

கவிப் பேரரசனே!

கவிதைகளுக்குள்ளும்

பாடல் வரிகளுக்குள்ளும்

வைரங்களையும்

முத்துக்களையும்

விதைத்து வைத்திருப்பவனே!

கவிதைகளை பாமரனின்

காலடிகளுக்கு கொண்டு சென்றவனே!

உனது

காதல் பாடல்களும்

கவிதை வரிகளும்

காதலர்களின்

தேசிய கீதமாக அல்லவா

ஒலித்துக்கொண்டிருக்கிறது.


உன் கவிதைகளில்

கொஞ்சும் சந்தம்!

நீ!

தமிழ் பேசும் மக்களின் சொந்தம்!

வாழ்க நீடூழி!!!

கவியாக்கம் -கலாநெஞ்சன் ஷாஜஹான்

Monday, July 11, 2011


கண்ணீர்

கண்கள்

வெளியேற்றும் கழிவு!

·

பெண்களின்

ஆயுதம்!

·

சிறுவர்களின்

பாதுகாப்புக் கவசம்.

சாதிக்கும் சக்தி!

·

மனச் சுமைகளை

குறைக்கும் மருந்து!

·

இதய வேதனையின்

இரத்தக் கசிவு!

·

போலி மனிதர்கள்

அணியும்

மூக்குக் கண்ணாடி!

·

விழி வானம்

துன்பத்திலும்

ஆனந்தத்திலும்

சிந்தும் மழை!

கவியாக்கம்கலாநெஞ்சன் ஷாஜஹான்