பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, April 9, 2020

கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதை

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட் 19)  வைரஸ் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தக் கவிதை  (07-04-2020) ஆக்கப்பட்டுள்ளது.

-     கவியாக்கம் - கலாநெஞ்சன் ஷாஜஹான் (இலங்கை, நீர்கொழும்பு)1


Thursday, March 12, 2020

நீர்கொழும்பு ஹோட்டலில் நடந்தது என்ன ? - எம். இஸட். ஷாஜஹான்


 (13-3-2020   திகதி விடிவெள்ளி பத்திரிகையில் நான் எழுதிய இந்தக் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. நன்றி  - விடிவெள்ளி) 


  
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாரிகளின்  மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நகரங்களில் நீர்கொழும்பு பிரதானமானதாகும். நீர்கொழும்பு கட்டுவபிட்டியவில் அமைந்துள்ள தேவாலயத்தின் மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.  இதன்காரணமாக பல  அப்பாவி உயிர்கள் பலியாயின. பலர் படுகாயங்களுக்கு உள்ளாயினர். புலர் தமது உறவுகளை இழந்தனர்.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற  தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில்; உள்ள ஏனைய முஸ்லிம்களைப் போன்று  நீர்கொழும்பு வாழ் முஸ்லிம்களும் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டனர்.