பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, February 21, 2014

மேல் மாகாண சபை தேர்தலும் சிறுபான்மை கட்சிகளும் - எம்.இஸட்.ஷாஜஹான்


(;தமிழ்த் தந்தி பத்திரிகையில் 16-2-2014 அன்று பிரசுரமானது)

எதிர்வரும் மார்ச்  மாதம் நடைறெவுள்ள மேல் மாகாண சபை தேர்தல்  சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தலாக உள்ளது.
இரு பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை  குறிவைத்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. அத்துடன் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் திட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளன.
 இம்முறை அதிக எண்ணிக்கையான முஸ்லிம் வேட்பாளர்கள் 

Friday, February 14, 2014

இனவாதிகள் - அரசாங்கம் - முஸ்லிம் தலைமைத்துவங்கள் - கலாநெஞ்சன்

'(தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 2-2-2014 அன்று பிரசுரமானது)

இலங்கையை முஸ்லிம் காலணித்துவமாக்கும் சதித்திட்டத்தை முறியடிக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வை.எம்.எம்.ஏ.அமைப்பு, உலமா சபை, முஸ்லிம் அமைப்புகள் தொடர்பாக பாரிய சந்தேகங்கள இருப்பதாகவும், கிழக்கில் சூ10ட்சுமமான முறையில் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் இயங்கி கொண்டிருப்பதோடு அதன் பின்னணியில் சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதச் சக்திகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thursday, February 13, 2014

மேல்,தென் மாகாண சபை தேர்தலும் மக்களின் பார்வையும் - தேச நேசன்


('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 2-2-2014 அன்று பிரசுரமானது)

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. பிரதான கட்சிகள் உட்பட தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும்தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
பொதுத் தேர்தல்  ஒன்றில் போட்டியிடுவது போல் பிரதான கட்சிகள் இரண்டும் இந்த தேர்தலுக்கு  தயாராவது போன்று தெரிகிறது.

சூடுபிடிக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைக் களங்கள் - தேசநேசன்

('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 9-2-2014 அன்று பிரசுரமானது)
மேல் மற்றும் தென்மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து இலங்கையின்  தேர்தல் வரலாற்றில் மேலும் இரு மாகாணங்களுக்கான தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற இருக்கிறது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு விமோசனமும் நன்மையும் கிடைக்கும் - மேல் மாகாண சபையின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் கார்த்திகேசு விக்னேஸ்வரம்


நேர்காணல்: எம்.இஸட்.ஷாஜஹான்

(வத்தளை - மாபொல முன்னாள் நகர சபை உறுப்பினரும்> ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட பிரதான செயலாளரும்> மேல்மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளருமான கார்த்திகேசு விக்னேஸ்வரம் 'தமிழ்த் தந்திக்கு' வழங்கிய விஷேட செவ்வி. 9-2-2014 அன்று பிரசுரமானது)

கேள்வி : நீங்கள் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணிக்கு சென்றீர்கள்?

பதில்: ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மணோ கணேசன்தான் இதற்கு காரணம். அவரது அரசியல் செயற்பாடுகளால் கவரப்பட்டே அவரது கட்சியில் இணைந்து கொண்டேன். தமிழ் மக்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பவர் மணோ கணேசன். அவர் பதவிகளுக்கும் பணத்திற்கும் விலை போகாதவர். சகல இன மக்களுக்கும் உதவி புரிபவர். மக்களின்  குரலாக ஒலிப்பவர். துணிந்து செயற்படுபவர். இவை என்னை கவர்ந்தன. அதன் காரணமாக அவரது கட்சியில் சேர்ந்தேன்.

கேள்வி :  நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வந்த பிறகு என்ன வித்தியாசத்தை  காண்கிறீர்கள்?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் மிகப் பெரும் கட்சியாகும். அக்கட்சி சகல இனத் தலைவர்களும் சேர்ந்து உருவாக்கிய கட்சியாகும். அது சகல இனத்தவர்களதும் கட்சியாகும். ஆயினும்> காலப் போக்கில்

இந்த அரசு மக்களை பிரித்து ஆட்சி செய்கிறது -நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து

நேர்காணல்: எம்.இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)

நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சிபிரதான அமைப்பாளரும்> நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவரும்> மேல்மாகாண சபையின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து 'தமிழ்த் தந்திக்கு' வழங்கிய விஷேட செவ்வி. 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 26-1-2014 அன்று பிரசுரமானது  

கேள்வி: மேல்> தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன. நீங்களும் ஐக்கிய தேசியக் கட்சி;யின் சார்பில்  கம்பஹா மாவட்ட வேட்பாளராக களமிறங்கவுள்ளீர்கள். இந்த தேர்தலில்  ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுமா? இந்த தேர்தல் தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்; : நிச்சயமாக எமது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.  அதற்காக சிறந்த வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். மக்களும் மாற்றத்தை விரும்புகின்றனர்.
இன்று, ஆளும் கட்சி பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு அரசியல்

மேல் மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் அமோக வெற்றி பெறும் - நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிதி மேயர் எம்.எஸ்.எம். சகாவுல்லா

நேர்காணல் :- எம். இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)

(நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிதி மேயரும்> ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தின்  நீர்கொழும்பு தலைவரும்,; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீர்கொழும்பு மத்தியக் குழுவின் பொருளாளருமான எம்.எஸ்.எம். சகாவுல்லா  தமிழ்த் தந்திக்கு வழங்கிய விஷேட செவ்வி. 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 26-1-2014அன்று பிரசுரமானது)

கேள்வி: உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிடுங்கள்?

பதில்1992 ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலுக்கு வந்த காலப் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீர்கொழும்பு, போருதொட்ட கிளையின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டடேன். அதனைத் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2006 ஆம் ஆண்டு

மேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக அமையும் - முஸ்லிம் காங்கிரஸ் கட்சி;யின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளர் ஷாபி ரஹீம்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி;யின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம் தமிழ் தந்திக்கு வழங்கிய விசேட செவ்வி. 19-1-2014 அன்று பிரசுரமானது

நேர்காணல் :- எம். இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)

உங்களது அரசியல் பிரவேசம்  மற்றும் வெற்றிகள் பற்றி கூறுங்கள் ?

நான் வர்த்தகத்துறையில்  ஈடுபட்டுக்  கொண்டிருந்த காலப் பகுதியில்  2004 ஆம் ஆண்டு  நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில்  போட்டியிடுமாறு புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய  முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் ஜனாப் நியாஸ் என்னை

அந்த தேரத்ல் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார்.பின்னர் அவர் என்னை கட்சித் தலைவர் ரஹுப் ஹக்கீமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.