பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, June 1, 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம் சிறைச்சாலைக்கு அமைச்சர் சுவாமிநாதன் திடீர் விஜயம்: நேரடி ரிப்போர்ட்


 நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருநது நான்கு விளக்கமறியல் கைதிகள் கடந்த  செவ்வாய்க்கிழமை (30-5-2017) அதிகாலை  1.30 மணியளவில் தப்பியோடியமையை அடுத்து சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலில் துளையை (ஓட்டையை) எற்படுத்தி  கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியுள்ள கைதிகள் பல்வேறு  சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களாவர். அவர்களில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.
சத்துர மதுசங்க (25 வயது), விபுல சுரங்க முனசிங்க (19 வயது), பி. ஜயகுமார். (26 வயது), மொஹமத் நவுபர் தவுபீக் முஹம்மத் நஸீம் (26 வயது) ஆகியோரே