பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, September 29, 2015

நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழா -2015 இல் எனக்கு 3 பரிசுகள்

கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன்  இணைந்து நீர்கொழும்பு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த 'நீர்கொழும்பு பிரதேச சாகித்திய மகோற்சவம்' இன்று செவ்வாய்க்கிழமை (29-9-2015) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர். அலவத்த தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். பிரபல சிங்கள கலைஞரும் அறிவிப்பாளரும் பாடலாசிரியருமான  வசந்த துக்கன்னாரால விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு சாகித்தியம் தொடர்பாக உரையாற்றினார்.