பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, March 15, 2014

மேல் மாகாண சபை தேர்தலும் சிறுபான்மை பிரதிநிதித்துவமும் - - எம்.இஸட். ஷாஜஹான்

(இக்கட்டுரை 16-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் சிறுபான்மை  மக்களுக்கு முக்கிய தேர்தலாக உள்ளது. குறிப்பாக மேல் மாகாண சபை தேர்தல்  தமிழ் முஸ்லிம் மக்களுக்கு  முக்கியமானதொரு தேர்தலாக அமைந்துள்ளது.
இது என்ன மாகாண சபை தேர்தல்தானே. பாராளுமன்ற தேர்தல் அல்லவே என சிறுபான்மை  மக்கள் கருதுவார்களாயின் அல்லது யார் ஆட்சி அமைத்தால் நமக்கென்ன என்று தேர்தலில் வாக்களிக்காமல் விடுவார்களாயின், அது சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பது

Thursday, March 13, 2014

அரசில் இருந்து விலகுமா முஸ்லிம் காங்கிரஸ்? -எம்.இஸட்.ஷாஜஹான்

 (இக்கட்டுரை 9-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
 முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றினை ஜெனீவா மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கொடுத்துள்ள விடயம்  தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம் காங்கிரஸ்  தலைவரும் அமைச்சருமான ரஹுப் ஹக்கீமுடன் கடும் தொனியில் கதைத்ததாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'உங்களால் ஆளும் கட்சியில் இருக்க முடியும் என்றால் இருங்கள் . இல்லையேல் விலகிச் செல்லுங்கள்' என்று ஜனாதிபதி ரஹுப்

Friday, March 7, 2014

இனவாத அமைப்ப்புக்களின் செயற்பாடுகள் வெற்றி அடையது - நீர்கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஓ.எம்.ஹீஸான்

(நீர்கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும்
மேல்மாகாண சபையின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான எம்.ஓ.எம்.ஹீஸான் 'தமிழ்த் தந்திக்கு' வழங்கிய விஷேட செவ்வி.23-2-2014 அன்று பிரசுரமானது)

நேர்காணல்;- எம்.இஸட்.ஷாஜஹான்

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸ்  கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. பின்னர்     அரசாங்கத்துடன் இணைந்து  கொண்டது.  மேல் மாகாண சபை தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது. பின்னர் இணைந்து கொள்ளும் என கூறப்படுகிறது. எனவே, முஸ்லிம் காங்கிரஸ்   தனித்து போட்டியிடாமல்  அரசாங்கத்துடன்  இணைந்து  தேர்தலில் போட்டியிட்டால் என்ன?

பதில்;: மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவது எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவேயாகும். பிரதான கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.

Saturday, March 1, 2014

தேர்தலுக்கு சவாலாக அமையும் வன்முறைகள் - எம்.இஸட்.ஷாஜஹான்

 (2-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிசுரமானது)
மேல்  மற்றும் தென் மாகாண சபை தேர்தல்  பிரசார நடவடிக்கைகள் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வரை (24-2-2014) தேர்தல் சட்ட மீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து 354 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது.