பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, July 28, 2014

அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்




புனித நோன்பின் போதனைகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - எம். இஸட். ஷாஜஹான்


(இக்கட்டுரை (28-7-2014) அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதம் மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. ரமழான் மாதம் முழுதும் நோன்பு நோற்கும் பாக்கியம் கிடைத்த எமக்கு  அல்லாஹ்வின் அருளினால்; நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

இறை பள்ளிவாசல்களில் தக்பீர் முழக்கம் ஒலிக்கிறது. ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை 'ரமழானில்' நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெரு நாளுமாகிய பெருநாள்