பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, January 7, 2013

கொழும்பில் மூன்றுமொழி பெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு விழா


அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டாக்டர் நொயல் நடேசன் மற்றும் முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்காஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் செயற்குழுக் கூட்டஅறையில் (இலக்கம் 08)
வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே, ஆங்கிலத்தில் வெளியான நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல் சமணலவௌ என்ற பெயரில் வெளியாகிறது. இதனை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மடுளுகிரியே விஜயரத்தின சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். 'வண்ணாத்திக்குளம்' நாவல் ஏற்கனவே ஆங்கிலத்தில் Butterfly Lake என்ற பெயரில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நல்லைக்குமரன் குமாரசாமி ஆவார்.

நடேசனின் மற்றுமொருநாவலான உனையே மையல்கொண்டு Lost in you என்னும் பெயரில் வெளியாகிறது. இதனை இலங்கையின் பிரபல நூல் வெளியீட்டாளர்கள் விஜித்தயாப்பா பதிப்பகத்தினர் வெளியிடுகின்றனர்.

முருகபூபதியின் பத்துசிறுகதைகள்
சிங்களத்தில் மதகசெவனெலி (Shadows Of Memories) என்றபெயரில் வெளியாகிறது. இக்கதைகளை ஏ.சி;.எம் கராமத் மொழிபெயர்த்துள்ளார். தோதன்ன பதிப்பகம் இதனைவெளியிடுகிறது.
இந்நிகழ்வை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்