பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, August 27, 2014

சிறுபான்மை மக்களை அடக்கி பெரும்பான்மையின மக்களை நம்பி தேர்தலில் குதிக்கத் தயாராகும் அரசு! - தேச நேசன்


(இக்கட்டுரை 24-8-2014 அன்றைய தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள 400 வருடம் பழமை வாய்ந்த திருகோணமலை வெள்ளை மணல் கருமலையூற்று பள்ளிவாசல்  இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
 பிரதேசத்தில்  கடும் மழை பெய்து கொண்டிருக்கையில்  அந்த  நேரத்தைப் பயன்படுத்தி கனரக இயந்திரத்தைக் கொண்டு பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளி நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சுமையில் வாழும் அரச ஊழியர்கள் - தேச நேசன்

(இக்கட்டுரை  17-8-2014 அன்றைய தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கமாறும் கோரி  கடந்த செவ்வாய்க்கிழமை (12-8-2014)  கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக  உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு  ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி ஒன்றை  நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், தாய்மார்கள் , பல்கலைக்கழக மாணவிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதி நாடகம் ஒன்றையும் நடத்தினர்.

மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்ல மறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு

 படைப்பிலக்கியவாதியும்  பத்திரிகையாளருமான  திரு. லெட்சுமணன் முருகபூபதியின்   20  ஆவது   நூல்   சொல்ல  மறந்த  கதைகளின் வெளியீட்டு   அரங்கு   கடந்த  சனிக்கிழமை 23  ஆம்  திகதி மெல்பனில்  Dandenong Central Senior Citizens Centre மண்டபத்தில் நடைபெற்றது.

லங்கை  கம்பன்  கழகத்தின்  ஸ்தாபக   உறுப்பினரும்   லக்கிய ஆர்வலருமான    திரு. கந்தையா   குமாரதாசன்  ,ந்நிகழ்வுக்கு தலைமைதாங்கினார்.

Saturday, August 16, 2014

இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் - ​தேச நேசன்

-  (இக்கட்டுரை 10-8-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும்  இலங்கையைச் சேர்ந்த அகதிகள்;   அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்டுவது பற்றி அடிக்கடி ஊடகங்கள் ஊடாக அறிந்து கொள்கிறோம்.

கடந்த வாரம் முதல் அது போன்ற நடவடிக்கை  இலங்கையிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆம்! இலங்கையில் தங்கியிருந்தபடி ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு புகலிடம்  கோரிய பாகிஸ்தானியர்கள் சிலர்  கடந்த வெள்ளிக்கிழமை (1-8-2014) குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் தமது தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Wednesday, August 6, 2014

மக்களை பொருளாதார சுமைகளிலிருந்து காப்பாற்றப்போவது யார்? - தேச நேசன்

(இக்கட்டுரை  3-8-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
வாழ்க்கைச் செலவு வானுயர உயர்ந்து நின்று  சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் சோதனைக்கு மேல் சோதனைகளை கண்டபடி வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கம் அடுத்த தேர்தல்களிலும் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்று திட்டங்கள் வகுத்து அதனை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வாக்காளப் பெருமக்களான பொது மக்கள் படுகின்ற  பொருளாதார அவஸ்தைகளை, இன்னல்களை சிந்திப்பதற்கு அதனைப் பற்றிப் பேசுவதற்கு வெகு சிலரே உள்ளனர். தற்போது நடக்கப்போகும் தேர்தலைப் பற்றி கட்சிகள் சிந்திக்கும் காலமாகும்.