பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, January 26, 2011

புதிய சிறகுகள் லங்கா கலை விழாவில் விருது
25-1-2011 அன்று கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற புதிய சிறகுகள் லங்கா கலை விழாவில் விருது கிடைத்தது.
கலை விழாவையிட்டு திறந்த போட்டியாக நடத்தப்பட்ட பாடல் இயற்றுதல் போட்டியியில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளமைக்காக விருது வழங்கப்பட்டது.அத்துடன் நான் ​எழுதிய ஆய்வு கட்டுரைக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.மனித உரிமை தொடர்பான போட்டி நிகழ்ச்சிக்காக ஆய்வு கட்டுரை சமர்பித்திருந்தேன்.


இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு நான் தேசிய ரீதியில் பெற்றுள்ள 33 ஆவது விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பாடசாலை மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டங்களிலும் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளேன் .
புதிய சிறகுகள் லங்கா கலை விழாவும் விருது வழங்கள் நிகழ்வும் கொழும்பு பொது நூலக வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. “லங்கா” சிங்களப் பத்திரிகை இதனை நடத்தியது.
இந் நிகழ்வில்அகில இலங்கை ரீதில் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் திறந்த போட்டியாகவும் நடத்தப்பட்ட இலக்கியக போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.தமிழ், சிங்கள மொழிப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன.
பிரபல தமிழ் இலக்கியவாதிகளான மேமன் கவி , திக்வல்லை கமால், ஏ.இக்பால் உட்பட பெரும் எண்ணிக்கையான சிங்கள இலக்கியவாதிகளும் பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
. லங்கா பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் பலவும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்