பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, December 8, 2011

பக்கற்றுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகள் தொடர்பில்
கவனம் செலுத்துவோம்


- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


எல்லோருக்கும்  மிகவும் பிடித்த ஒன்றுதான் ஐஸ்கிறீம். குறிப்பாக சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக ஐஸ்கிறீம் உள்ளது.  உணவின் பின் டெஸர்ட் ஆகவும் பலரும் ஐஸ்கிறீம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அந்த ஐஸ்கிறீம் சாப்பிடுவதற்கும் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஆம் விற்பனை  நிலையங்களில் பிளாஸ்ரிக் பக்கட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகளைத்தான்   இங்கு குறிப்பிடுகிறோம்.

இது தொடர்பான  நுகர்வோரை  அறிவுறுத்தும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சந்தையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகளில் நியமிக்கப்பட்ட அளவு வெப்ப நிலையில் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருக்கவில்லை என தெரிய வந்துள்ளது.  இதன் காரணமாக அந்த ஐஸ்கிறீம் வகைகளில் கிருமிகள்  உற்பத்தியாகும் நிலையோ அல்லது நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையோ ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பு பிரதான சுகாதார  வைத்திய அதிகாரி பிரதீப் காரியவசம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்கிறீம் வகைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் அதனை குளிரூட்டிகளில் (பிரிட்ஜ், டீ பிரீஸர்) சேமித்து வைக்கும்போது 18 சென்டி கிரேட்டிற்கும் குறைந்த வெப்ப நிலையில் வைக்க வேண்டும்.


18 சென்டி கிரேட்டிற்கும் மேலான வெப்ப நிலையில் (உஷ்ணத்தில்)  வைப்பதனால் விற்பனை செய்யப்படும்  ஐஸ்கிறீம் வகைகளில் 40  சதவீதமானவை நுகர்வுக்கு பொருத்தமற்றதாக  ஆகிவிடுவதாக  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்கிறீம்  வகைகளை விற்பனை செய்யும் சில வர்த்தக  நிலையங்கள் சில சுப்பர் மார்க்கட்டுக்கள் மின்சாரத்தை  சேமிப்பதற்காக குளிரூட்டிகளிற்கான மின்சாரத்தை  அடிக்கடி துண்டித்து விடுவதன் காரணமாக இந்நிலை ஏற்படுகிறது. உரிய  வெப்ப நிலையில் வைக்கப்படாததன்  காரணமாக ஐஸ்கிறீம் வகைகளில் கிருமிகள் உற்பத்தியாகும் நிலையோ அல்லது நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையோ ஏற்படலாம். ஆகவே நுகர்வோர்  இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

ஐஸ்கிறீம் வகைகள் இலகு தன்மை அல்லது  அதிக கடினத் தன்மை  உடையதாக இருந்தால் அதனை வாங்குவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளர்.

இதேவேளை  ஐஸ்கிறீம் வகைகளை  விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களில் உரிய வெப்ப நிலையில் அவைகள் சேமித்து (இருப்பாக) வைக்கப்படாதது தொடர்பாக கிடைத்த தகவல்களை அடுத்து ஐஸ்கிறீம் தயாரிக்கும் ஐந்து நிறுவனங்களுக்கு தமது உற்பத்தி செயற்பாடுகள் தொடர்பாக அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு பொது  சுகாதார  திணைக்களம்  உத்தரவிட்டுள்ளது.


பொதுவாகவே  இனிப்பு உணவுப் பொருட்கள் பற் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பவை நீரிழிவு போன்ற நோய்களை  ஏற்படுத்துபவை.

ஆகவே  இனிப்பு உணவு வகைகளை உட்கொள்ளும் போது தமது ஆரோக்கிய விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது ஐஸ்கிறீம் இனிப்பு உணவை பாவனைக்கு எடுக்கும் போது மேற்சொன்ன விடயங்களில்  கவனம் செலுத்த வேண்டியிருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். என்ன செய்வது எல்லாமே எங்கள் ஆரோக்கியத்திற்காகத்தானே.

ஆக்கம் - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்