பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, December 10, 2011

ஞாபக மறதியும் நினைவாற்றலும்

          - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed 


 இன்றைய அவசர யுகத்தில் ஞாபக மறதி என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. சிலருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஓரளவு ஞாபக மறதி இருக்கும்.

ஞாபக மறதியை நோய் என்றும் சிலர் கூறுவர். அது போல் நினைவாற்றலை ஒரு கலை என்றும் கூறுவர்.

ஞாபக மறதி காரணமாக இழப்புக்களும் பின்னடைவுகளும், அசௌகரியங்களும், எதிர் மறையான விடயங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. இருந்த போதிலும் ஞாபக மறதி காரணமாகவே
மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறான் கவலை பின்தொடர்ந்து இம்சைப்படுத்துவதில்லை.

ஞாபக மறதி இல்லையேல் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த பந்தங்களின் மரணம், வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள், இழப்புகள், சோகங்கள், உளவியல் ரீதியான தாக்கங்கள் தொடர்பில் கவலையடைந்த படியே இருப்பான். உலகமே சோகமயமாக காட்சி தரும் எனலாம்.


நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு வாசிகசாலை போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் தகவல்களை நீங்கள் சேமிக்கும் முறையை வைத்து உங்கள் நினைவாற்றல் அமைகின்றது என்று விஞ்ஞானம் கூறுகிறது.

நூலகங்களில் புத்தகங்களை அகர வரிசைப்படி தொகுக்காவிட்டால் தனியொரு புத்தகத்தை தேடிக் கண்டு பிடிப்பது கடினம். அது போன்று தான் நினைவு அடுக்களில் நாம் படிக்கும் தகவல்களை முறைப்படி தொகுக்காவிட்டால் தேவையானபோது வெளியே எடுப்பதும் கடினம்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கிய காரணம் கவலைகளே. இரத்த ஓட்டம் குறையும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் ஏனைய முக்கிய காரணங்களாகும். மூளை சோர்ந்து விடாமல் கவனித்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

எமது மனதை எந்தளவுக்கு ஒருமுகப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு எமது ஞாபக சக்தியையும் அதிகரிக்க முடியும்.

நினைவாற்றலின் வகைகள்

01. குறுகிய கால நினைவாற்றல்

எமது மூளையில் அத்தனை தகவல்களும் தொடர்ந்து சேமித்து வைக்கப்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள்
மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டுவிடுகின்றன. இது குறுகிய கால நினைவாற்றல் எனப்படும்.

02. நீண்ட கால நினைவாற்றல்

எம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை, அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை, நாம் செய்யும் தொழிலுக்கு தேவையானவை எமது மூளையில் நீண்ட கால நினைவுகளாக பதிந்து விடுகின்றன.

எமது மூளை பல செய்திகளையும் தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது. அவற்றுடன் புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகளாக அந்த தகவல்கள் வெளிக் கொணரப்படாமல் போனால் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன.

நீண்ட கால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலவேளை சிரமப்படுவது அதனாலேயாகும். நீண்ட காலத்தின் பின்னர் நாம் சந்திக்கும் நபரின் அல்லது சிறுவயது நண்பரின் பெயர்
ஞாபகத்துக்கு வராமல் இருப்பதை (ஆனால் அவரின் பெயர் நுணி நாக்கில் இருப்பது) இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கான கோட்பாடுகள்

01.தன்னம்பிக்கை

நினைவாற்றல் தொடர்பில் எமக்கு தன்னம்பிக்கை அவசியமாகும். நினைவாற்றல் என்பது மூளையின் திறமையாகும். இதனை பயிற்சியாலும் முயற்சியாலும் வளர்த்துக் கொள்ள முடியும். என்ற தன்னம்பிக்கை அவசியமாகும்.

02.ஆர்வம்

ஒரு விடயம் தொடர்பான ஆர்வமும் அவ்விடயம் தொடர்பில் ஞாபக சக்தி ஏற்பட காரணமாக அமையும்.

03.செயல் ஊக்கம்  

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விஷயங்கள் நன்றாக பதியும்.

04.விழிப்புணர்வு

மனம் விழிப்பு நிலையில் இருந்தால் எமது கவனமும், ஒருமைப்பாடும் மிகச் சிறந்ததாக இருக்கும்.  இதற்கு யோகாசனம், தியானம், சமய வழிபாடுகள் துணை புரியும்.

05.புரிந்து கொள்ளல்

புரிந்து கொண்ட விடயங்கள் மனதில் பதியும்.

06. உடலாரோக்கியம்


மாணவர்கள் நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ள செய்ய வேண்டியவை

01.பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.

02. படிக்கும் சூழல்

அமைதியான சூழலில் படித்து பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உண்டு. இரைச்சலான சூழலில் படித்து அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களும் இருக்கிறார்கள். படிக்கும் இடத்தை விட மனம் தெளிவாக இருப்பதே முக்கியமாகும்.

03. நினைவுக்குக் கொண்டு வருதல்

படிக்கும் பாடத்தை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வரல் வேண்டும். மீட்டல் பார்த்தல், மூலம் பாடவிடயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

04. மனப்பாடம் வேண்டாம்
மனப்பாடம் செய்வதால் பலனில்லை. பயந்தொடர்பாக நன்றாக விளங்கிக் கற்றகாக  வேண்டும். குறிப்பிட்ட விடயத்தை நன்றாக புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். செயல் முறை கற்றல்  கற்பித்தல் நடவடிக்கை மூலமாக  மாணவர்கள் விடயத்தை நன்றாக புரிந்து கொள்வர்.

05. அன்றே படித்தல் வேண்டும்.

அன்று கற்பதை அன்றே படித்தல் வேண்டும்.


நினைவாற்றலை அதிகரிக்க செய்ய வேண்டியவை

01. மனதை ஒரு நிலைப்படுத்துதல்.

யோகாசனம், தியானம், சமய வழிபாடுகளில் ஈடுபடல் போன்றவை மூலமாக ஆரோக்கியமான மூளைகளில் தகவல்களை குடியேற்றம் செய்வதன் மூலம் சிறந்த நினைவாற்றலை பெற முடியும்.

02.  உடற்பயிற்சி
03. மூளைக்கு பயிற்சி வழங்குதல்.

குறுக்கெழுத்துல் போட்டிஎண்புதிர்அயல் மொழிகளை கற்றல் போன்றன சில உதாரணங்களாகும்.

04. போசாக்கான உணவு (குறிப்பாக காய்கறிகள்பழவகைகள்)

05. போதியளவு உறக்கமும் ஓய்வும்

06. முதிய வயதிலும் ஏதாவது பணிகளை செய்தல் .

 வயதாக  நினைவாற்றல் குறைவடையும்பணியில் ஈடுபட்டிருப்பவர் ஓய்வு பெற்ற பின் விரைவில் நோய்களுக்கு ஆளாவது இயற்கை தொடர்ந்து ஏதாவதொரு பணியில் ஈடுபட்டிருந்தால் மூளைக்கு வேலை கிடைக்கும் நினைவாற்றலோடு ஆரோக்கியமும் மேன்மை அடையும்.

07. உடலுக்கு, தேவையான அளவு நீர் அருந்துதல் வேண்டும்.


மருத்துவ ரீதியில்


08. துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடிப்பது ஞாபக சக்தியை அதிகரிக்கும்

09. அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பதினைந்து கருஞ்சீரக விதைகளைமென்று தின்று வருதல் வேண்டும்.

10.தூதுவளை கீரையை குழம்பு மற்றும் பொரியல் செய்து வாரத்துக்கு ஒரு தடவை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு வலிமை கிடைக்கும்.

11. பசுமையான வில்வ  இலையை அரைத்து சாறு எடுத்து குடித்துவந்தால் ஞாபக மறதி நீங்கி நினைவாற்றல் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்