பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, April 19, 2012

நூரானியா ஹஸனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன்


இன்று காலை அநுராதபுரம் ரம்பாவெல - மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளரும், சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளருமான நூரானியா ஹஸன் (Fawsul Hassan) அகால மரணமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

1191 ஆம் ஆண்டு அவரோடு எனக்கு முதலில் அறிமுகம் ஏற்பட்டது.
1991 ஆம் ஆண்டு இலங்கையில் தெற்காசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது (SAF Games -91 ), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் விளையாட்டு வர்ணனையாளராக  பணியாற்ற தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வர்ணனையாளர் குழுவில் நானும் அவரும் அடங்கியிருந்தோம்.

இதன்போது ஏற்பட்ட நட்பை தொடர்ந்தது , அவர் முஸ்லிம் சேவை பணிப்பாளராக பணியாற்றிய போது, வானொலியில் ஹஜ் பெருநாள் கவியரங்கில் கவிதை வாசிக்க சந்தர்ப்பம் தந்தார் என்பதை நன்றியோடு நினனைத்துப் பார்க்கிறேன்.
நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக (1992-1994) பணியாற்றிய காலத்திலும் அவருடன் நட்பு இருந்தது.
அவரது மறைவு அதிர்ச்சியை தருகிறது. இன்னாலில்லாஹி வஹின்னாஹ் இலைஹி ராஜிஹுன்.

ஏக இறைவன் அவருக்கு சுவர்க்கத்தை தருவானாக, அமீன்.
இப்படத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் (SAF Games -91 ), ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்ணனையாளர்  குழுவினர் காணப்படுகின்றனர். நூரானியா ஹஸன் படத்தில் பின்வரிசையில் (நிற்பவர்கள் வரிசையில்) இடமிருந்து வலமாக ஏழாவதாக காணப்படுகிறார்.நான் முன் வரிசையில் ஆறாவதாக அமர்து உள்ளேன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்