பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, September 29, 2012

மேல்மாகாண சாகித்திய விழா பாடலாக்கப் போட்டியில் திறந்தபோட்டிப் பிரிவில் பரிசு

 மேல்மாகாண சாகித்திய விழா-2012 நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு -7 இல் அமைந்துள்ள மேல்மாகாண அழகியல் நிலையத்தில் மேல்மாகாண போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார ,கலை கலாசார அலுவல்கள், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் உபாலி கொடிகார  தலைமையில் இட.ம்பெற்றது.

.
சிங்கள, தமிழ் மொழிப் பிரிவுகளில் மேல்மாகாண பாடசாலை மாணவர்கள்; மத்தியிலும் திறந்த வயதுப் பிரிவிலும்; நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு இந்நிகழ்வில் சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம்பெற்றன.


மேல்மாகாண கலை கலாசார அலுவல்கள் அமைச்சின் உதவிச் செயலாளர் ஜயனி ராஜகருனா வரவேற்புரை நிகழ்த்தினார்.அமைச்சர் உபாலி கொடிகார மற்றும் பேராசிரியர் சரத்விஜேசூரிய ஆகியோரும் அங்கு உரை நிகழத்தினர்.
இந்நிகழ்வில் பாடலாக்கப்போட்டியில் திறந்தபோட்டிப் பிரிவில் எனக்கு முதலாம் இடம் பெற்றமைக்கான பரிசாக சான்றிதழும் ஆறாயிரம் ரூபா பரிசும்  கிடைத்தது 
.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்