பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, January 9, 2013

பூவுக்கு வைத்தார்கள் நெருப்பு!


  
வறுமை சேற்றில் பூத்த
செந்தாமரை மலருக்கு
பாலை மண்ணில்
மரண தண்டனை..!


சகோதரி ரிஸானா நபீக்!
உனக்கு வழங்கப்பட்டது
தீர்ப்பு அல்ல!
தீ !





ஏழ்மைக்கு
இழைக்கப்பட்ட
மாபெரும் கொடுமை!

மன்னிக்கத்  தெரிந்தவர்கள்
மன்னிக்கத் துனிந்தவர்கள்  
பிறந்த மண்ணில்
உனக்கு தண்டிப்பு !


ஈஸா நபி
சிலுவையில் அறையப்பட்டார்!
நீ சிறையில்
அறையப்பட்டாய்!


நீ
வறுமையின் குறியீடு!


எங்கும்
பேதங்கள்  இல்லாமல்
உனக்காக எல்லோரும்
அழும் போது....
அங்கே
புனிதர் பிறந்த மண்ணில்
பாவப்பட்ட ஜென்மங்கள்!




மொட்டு நறுக்கப்பட்டதாம்
அதனால்
பூவுக்கு வைத்தார்கள்
நெருப்பு!


தூ....!
மன்னிக்கத் தெரியாத
மனங்களுக்கு வழங்க வேண்டும்
தூக்கு!


ரிஸானா...!
கொலை செய்யப்பட்டது
நீ அல்ல.
மனிதம்!


சகோதரி ...!
உனக்காக காத்திருக்கிறது
மறுமையில்
உயர்ந்த சுவர்க்கம்!

-    கலாநெஞ்சன் ஷாஜஹான்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்