பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, June 2, 2013

காலத்தை வென்ற குரல் காற்றோடு கலந்தது

(இக்கவிதை 2-6-2013, இன்றைய 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)





காற்றோடு
கலந்தது
தமிழ்;பாட்டுக் குயில்!

அரை நூற்றாண்டாய்
தமிழ் சினிமா
இசை உலகையாண்ட
சிம்மக் குரல்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

பாட்டுக்கு உயிர் கொடுத்த
இசைக் குயில்
அதன் பாட்டுக்கு
பறந்து விட்டது
இசை உலகைவிட்டு!


டி.எம்.எஸ். !!
உன் பாடல்களால்
வெற்றி பெற்ற
படங்கள் ஏராளம்!
தோற்றுப் போன
திரைப் படங்களில் கூட
வெற்றி பெற்றன
உன் பாடல்கள்!

சோர்ந்திருக்கும் உள்ளங்களுக்கு
உற்சாக பானம்
உன் இனிய பாடல்கள்!

கவலைக் கொண்ட
இதயங்களுக்கு ஆறுதல்
உன் தத்துவப் பாடல்கள்!

காதலியிடம் தூது போயின
உன் காதல் பாடல்கள்!

இறை நாட்டம் வளர்த்தன
உன் பக்திப் பாடல்கள்!

மக்கள் திலகமும்
நடிகர் திலகமும்
வாய் அசைத்தார்கள்
உன் குரலுக்கு!
நீ திலகங்களின் குரலானாய்!
குரல்களுக்கே திலகமானாய்!


வானொலியில்
உன் பாடல்கள்
ஒலிக்காத நாள்
தேசிய துக்க தினத்தில் மட்டும்தான்!


நீ
அழியாத கானங்கள் தந்தவன்!
உன் வசீகரக் குரலால்
காலத்தை வென்றவன்!
காலம் உள்ளவரை
உன் நாமம் வாழும்!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்