பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, November 21, 2015

பிரதேச, மாவட்ட சாகித்திய விழா போட்டிகளில் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு நான்கு பரிசில்கள்

 நீர்கொழும்பு பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து  2015 ஆம் ஆண்டுக்கான பிரதேச சாகித்திய கலா மகோற்சவத்திற்காக நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளில் எனக்கு இரண்டு முதலாமிடங்கள் கிடைத்துள்ளன.

  திறந்த போட்டிப் பிரிவில் கவிதை மற்றும் பாடலாக்கம் ஆகிய போட்டிகளிலேயே  எனக்கு   இரண்டு முதலாமிடங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் கம்பஹா மாவட்ட செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து மாவட்ட சாகித்திய கலா மகோற்சவத்திற்காக (2015) நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளிலும்  அடியேனுக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. கம்பஹா மாவட்டத்தில் 
கவிதைப் போட்டியில்; முதலாமிடத்தையும், பாடல் ஆக்கப் போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளேன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்