பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, November 27, 2016

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து எக்ஸ்ரே பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்   கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து  தீ விபத்து இடம்பெற்ற  புனரமைப்பு செய்யப்படும் ஆறு மாடிக் கட்டடத்தில்  தற்காலிகமாக இயங்கி வந்த வந்த எக்ஸ்ரே பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புனரமைப்பு செய்யப்பட்டு வரும் வைத்தியசாலை கட்டிடத்தின் கீழ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை  திடீரென தீப்பிடித்தது. மின்சாரம் விநியோகிக்கும் (பெனல்போர்ட்)  அறையில்
ஏற்பட்ட தீ காரணமாக வார்ட்டுகள் சிலவற்றில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வரும்  நோயாளிகள் மின்சாரம்  இன்றி அசௌகரியத்திற்கு ஆளாயினர். இரவு 9 மணியளவிலேயே மின்சாரம் வழமைக்கு திரும்பியதாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் தெரிவித்தனர்.
அத்துடன் தீவிபத்தின் காரணமாக எற்பட்ட புகையை சுவாசித்த புனரமைப்பு செய்யப்பட்டு வரும் கட்டிடத்தில் இயங்கி வந்த எக்ஸ்ரே பிரிவில் இருந்த நோயாளிகள் மற்றும் தாதிகள்  பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.
படம்: தீ பற்றிய மின்சார கட்டமைப்பு அறை





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்