பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, July 21, 2013

இரண்டு வருடமாக வெடிப்படைந்து வடிந்தோடிக் கொண்டிருந்த குடிநீர் விநியோகக்; குழாய் திருத்தப்பட்டது: ஊடகவியலாளருக்கு பிரதேசவாசிகள் நன்றி தெரிவிப்பு

நீர்கொழும்பு - தலாதீவு கருமாரி அம்மன் கோயில் முன்பாக உள்ள வீதியோரத்தில் குடிநீர் விநியோகம் செய்யும்; குழாய் வெடிப்படைந்ததன்காரணமாக கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தண்ணீர்; வீணாய் வீதியோரத்தில் வடிந்தோடுவதாக கடந்த புதன் கிழமை (17-7-2013) தொலைக்காட்சியில் ‘நிவ்ஸ்ட் பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர்’
மூலமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதனை அடுத்து நீர்கொழும்பு நீர்வழங்கள் சபை  இரண்டு தினங்களில் (19-7-2013) குடிநீர் விநியோகக் குழாயை பழுது பார்க்கும் வேலையை மேற்கொண்டது. இது தொடர்பாக பிரதேசவாசிகள் குறித்த செய்தியை வெளியிட்ட சிரஸ, சக்தி மற்றும் எம்.டி.வி தொலைக்காட்சி சேவைகளுக்கும் செய்தியை ஊடகங்களில் வெளியிட்ட  எனக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

குடிநீர் விநியோகம் செய்யும்; குழாய் வெடிப்படைந்தமை தொடர்பாக பிரதேசவாசிகள் பல தடைவைகள் அதிகாரிளுக்கு அறிவித்துள்ளனர். ஆயினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்தே ஊடகங்களில் இது தொடர்பாக செய்தியை வெளியிட அவர்கள் என்னை நாடினர். இந்த வெற்றி எனக்கு பெரும் மன நிறைவை தந்துள்ளது. ஊடகங்களின் சக்தி மகத்தானது.


-    எம்.இஸட.; ஷாஜஹான்







No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்