பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, December 16, 2018

ரணில் விக்ரமசிங்க பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்ததை அடுத்து நீர்கொழும்பு நகரில் பாற்சோறு பகிர்ந்து கொண்டாட்டம்


இன்று ரணில் விக்கரமசிங்க  ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்தததை அடுத்து நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் பாற்சோறு பகிர்ந்து பட்டாசு கொளுத்தி கொண்டாடினர். நகரின் சகல பிரதேசங்களிலும் பட்டாசு கொழுத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நீர்கொழம்பு பிரதான அமைப்பாளரும் மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ரொயிஸ் பெர்னாந்துவின் தலைமையில் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில நிகழ்வு இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின்  நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட அதிக எண்ணிக்கையானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ரொயிஸ் பெர்னாந்து, மாநகர சபை உறுப்பினர் சஜித்மோகன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.













No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்