பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, August 2, 2011


வையகம் போற்றும் வான் மறை

இனிய திருக்குர்ஆனே!
இறை மறையே!
v   
நீ!
உலகின் இருளை
ஒழிக்க வந்த பேரொளி!
v   
ஆராய்பவர்களுக்கு
அட்சய பாத்திரம்!
v   
அறிவின் வேர்
வேருக்கு நீர்!
v   
அஞ்ஞானத்தின் பலி பீடம்
விஞ்ஞானத்தின் ஆய்வு கூடம்!
v   
ஆத்மீக சூரியன்
லௌகீக சந்திரன்!
v   

சாந்தி நபியின்
சமாதான தூது!
v   
அதிசய அற்புதம்
அற்புத அதிசயம்!
v   
மனித இலக்கியங்கள் போற்றும்
புனித இலக்கியம்!
v   
நூல்களின் உலகம்
உலகின் நூலகம்!
v   
படைப்பினங்களின்
பூரண சரிதை!
v   
இறைவன் எழுதிய
இனிய கவிதை!
v   
ஓ.....
வான் மறைப் பூவே!
உன்னை ஓத ஓத
புதிது புதிதாயல்லவா
புதுமையாய்ப் பூக்கிறாய்!
v   
நீ
வாடாத பூ!
உதிராத பூ!
இறவாத பூ!
ஒற்றைப்பூ!
v   
உன்
உயர்ந்த எழுத்துக்கள்
உயிரோட்டமானவை!
அறிவு இறந்தவர்களால்
இந்த
உண்மையை உணற முடியாது!
v   
உன் அழகிய கருத்துக்கள்
முழுமையானவை!
அறை குறை அறிவால்
அதை
முழுதாய்ப் புரிய முடியாது!
v   

உன்
கருவூலங்களுக்கு அளவேயில்லை!
ஞானமற்றவர்களால்
உனக்கு வியாக்கியானம்
கூறமுடியாது.!
v   
ஓ....
அல்குர்ஆனே!
நீ ஒரு கடல்.!
உனக்கு வெளியே
கானல் நீர்த் திடல்!
v   
உன்னைக் காப்பவன் இறைவன்.
உன் வழி வாழ்பவனே
உண்மை மனிதன்!
v   
-     கலாநெஞ்சன் ஷாஜஹான்
        www.kalanenjanviews.blogspot.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்