பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, August 8, 2013

வந்தது நோன்புப் பெருநாளே



தக்பீர் முழக்கம் பள்ளியில் ஒழிக்க
இதயங்கள் தோறும் இன்பங்கள் பிறக்க
வந்தது நோன்புப் பெருநாளே
இன்பம் பொங்கும் திருநாளே

புத்தாடை யணிந்து நறு மணம் பூசி
பள்ளிக்குச் சென்று வருவோமே
ஒருவரை யொருவர்  ஆரத் தழுவி
ஸலாம் கூறி மகிழ்வோமே


தக்பீர் முழக்கம் ஓங்கி ஒலிக்க
சிறுவர்கள் எல்லாம் குதூகலிக்க
அறுசுவை யுணவை அயலவர்க்களித்து
பெருநாள் இன்பம் பகிர்வோமே

உறவினர், நண்பர்கள் இல்லம் செல்ல
பிரிந்தோர் மீண்டும் உறவுகள் கொள்ள
வந்தது நோன்புப் பெருநாளே
இன்பம் பொங்கும் திருநாளே!

-      கலாநெஞ்சன் ஷாஜஹான் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்