பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, August 3, 2013

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (2-8-2013) மாலை நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள பெரடைஸ் பெலஸ் உற்சவ மண்டபத்தில் இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர்.அலவத்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சாபி ரஹீம், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஈஸான், சர்வமதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஹனீபா, அங்குருகாமுல்ல விகாராதிபதி ஞானசிறி தேரர்,  கடற்கரைத் தெரு சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதான பூசகர்; குகணேஸ்வரக் குருக்கள், அருட் தந்தை பெட்ரிக் பெரேரா உட்பட பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் மௌலவி அஷ்ஷெய்க் அஹ்மத்தீன் நோன்பின் சிறப்பு தொடர்பில் பிரதான உரை நிகழ்த்தினார்.






















No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்